10.ஆம் வகுப்பு-மாதிரி பாடத்திட்டம்
வகுப்பு:
10.ஆம் வகுப்பு
பாடம்: தமிழ்
தலைப்பு: விரிவானம்
- மங்கையராய்ப் பிறப்பதற்கே
கற்கண்டு(இலக்கணம்) -புறப்பொருள்
இலக்கணம்
நாள்: 03-01-22 முதல் 08-01-22 வரை
பொது
நோக்கம்:
@ நாட்டின்
பன்முக வளர்ச்சிக்கு வித்திட்ட பெண்களின் பங்களிப்பினைக் கலைநிகழ்ச்சி விவரிப்பாக வெளிப்படுத்தும்
ஆற்றல் பெறுதல்.
@ பொருளிலக்கணத்தில்
புறப்பொருள் பெறும் இடமறிந்து,அதனைச் செய்யுளில் கண்டறியும் திறன்பெறுதல்.
சிறப்பு நோக்கம்:
# சிறந்த
பெண் ஆளுமைகளைப் பற்றி அறிந்து கொள்ளுதல்
# இசைத்துறையில்
சாதனை புரிந்த எம்.எஸ்.சுப்புலட்சுமியைப் பற்றித் தெரிந்து கொள்ளுதல்.
#
நாட்டியப்
பெண்மணி பாலசரசுவதி அவர்கள் அவரது குறிக்கோளை அடைய எவ்வளவு உழைத்தார் என்பதைப் புரிந்து
கொள்ளுதல்.
#எழுத்தாளர்கள்
எப்படி இருக்கவேண்டும் என்பதை இராஜம் கிருஷ்ணன் மூலம் அறிதல்.
# பெண்கள்
எவ்வளவு ஆற்றல் பெற்றவர்கள் என்பதை கிருஷ்ணம்மாள் மூலமும்,மதுரை சின்னப்பிள்ளை மூலமும்
தெரிந்து கொள்ளுதல்.
பாட அறிமுகம்(ஆர்வமூட்டல்)
Ø
“உங்களுடைய
உறவினர்களில் பெண்கள் யாரேனும் உயர்பதவிகளில் உள்ளார்களா?” என மாணவர்களிடம் கேட்டு,அவர்கள்
கூறும் பதிலிலிருந்து அவர்கள் கல்வியால் எங்ஙனம் மேன்மை அடைந்துள்ளார்கள் என்பதை விளக்கி,அதன்
மூலம் பாட நோக்கத்தை உணர்த்தி மாணவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்துதல்.
Ø
பாகுபலி
திரைப்படக்காட்சியைப் பற்றிக்கூறி புறத்திணைகளை அறிமுகம் செய்தல்.
கற்பித்தல் துணைக்கருவிகள்:
வலையொளிப்பதிவுகள்,உயர்தொழில்நுட்ப ஆய்வகம்,பாடநூல்,சுண்ணக்கட்டி,
கரும்பலகை,கல்வியிற் சிறந்த பெண்களின் புகைப்படங்கள் முதலியன.
பாடப்பொருள் சுருக்கம்:
மங்கையராய்ப்பிறப்பதற்கே:
@ எம்.எஸ்.சுப்புலட்சுமி-தனது
இசைத் திறமையால் இந்தியாவின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா” விருதைப்பெற்றவர்.
@ பால
சரசுவதி-பரத நாட்டியத்தால் உலகப்புகழ் பெற்றவர்.
@
இராஜம்
கிருட்டிணன் – தனது எழுத்தாற்றலால் மாபெரும் புகழடைந்தவர்.
@ கிருட்டிணம்மாள்
செகநாதன் காந்தியடிகளின் பல விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றவர்.
@
மதுரை
சின்னப்பிள்ளை- படிப்பறிவே இல்லாமல் பல பெண்களின் முன்னேற்றத்துக்குக் காரணமாக அமைந்தவர்.
புறப்பொருள் இலக்கணம்:
ü
வெட்சி-நிரை
கவர்தல்
ü
கரந்தை-நிரை
மீட்டல்
ü
வஞ்சி
-மண்ணாசை கருதி போருக்குச்செல்லல்
ü
காஞ்சி-எதிர்த்துப்போரிடுதல்
ü
நொச்சி-மதில்
காத்தல்
ü
உழிஞை-மதில்
வளைத்தல்
ü
தும்பை-
இரு தரப்பும் களத்தில் போரிடல்
ü
வாகை-வெற்றி
பெறுதல்
ü
பாடாண்-வெற்றி
பெற்ற மன்னனைப் புகழ்ந்து பாடுவது
ü
பொதுவியல்-முதல்
9 திணைகளின் பொதுவான செய்திகள்
ü
கைக்கிளை-ஒருதலைக்காமம்
ü
பெருந்திணை-பொருந்தாக்காமம்
ஆசிரியர் செயல்பாடு:
§
நிகழ்காலச்சான்றுகள்
மூலம் பெண்களின் ஆளுமையைப் பற்றி விளக்க முற்படுதல்
§
பாடத்தில்
இடம்பெற்ற பெண் ஆளுமைகள் குறித்த காணொளிகளைக் காண்பித்தல்
§
வில்லுப்பாட்டு
வடிவில் பாடப்பகுதி இடம்பெற்றுள்ளதால்,வகுப்பறையில் வில்லுப்பாட்டு வடிவிலேயே பாடத்தைக்
கற்பிக்க ஏற்பாடு செய்தல்.
§
புறப்பொருள்
திணைகளைக் கதை வடிவில் கூறி விளக்குதல்.
மாணவர் செயல்பாடு:
Ø பெண்ணாற்றல்
உலகிலேயே வலிமையானது என்பதை உணர்தல்.
Ø ஏட்டுக்கல்வியின்
மூலம் மட்டுமின்றி,தங்களிடமுள்ள தனித்திறமைகள் மூலமும் உயர்நிலையை அடையமுடியும் எனும்
நம்பிக்கை புரிந்து கொளல்
Ø பண்டைய
புற வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்ளுதல்.
கருத்துரு வரைபடம்:
மங்கையராய்ப் பிறப்பதற்கே
வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு
வலுவூட்டல்.
குறைதீர் கற்றல்:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு பாடக் கருத்துகளை கூறி குறைத் தீர் கற்றலை மேற்கொள்ளல்.
மதிப்பீடு:
Ø ஐ.நா.அவையில் பாடிய இசைக்கலைஞர் யார்?
Ø தேசிய கீதத்துக்கு நாட்டியமாடிய நடனக்கலைஞர் யார்?
Ø நாட்டின் பிரதமரே காலில் விழுந்து வணங்கிய பெண்மணி
யார்?
Ø ஆநிரை பற்றிய திணைகள் யாவை?
Ø மதிற்போர் பற்றிய திணைகள் யாவை?
Ø பொதுவியல் திணை என்பது யாது?
தொடர்பணி:
# மங்கையராய்ப்
பிறப்பதற்கே என்ற துணைப்பாடப்பகுதியை கட்டுரையாக எழுதிவரச்செய்தல்.
# புறப்பொருள்
இலக்கணத்தை மாணவர்கள் புரிந்து கொண்டவாறு அவர்களது சொந்த நடையில் எழுதிவரச்செய்தல்