9 TH STD TAMIL-MODEL LESSON PLAN- JANUARY 1 ST WEEK(03-01-22 TO 08-01-22)

 9. ஆம் வகுப்பு-மாதிரி பாடத்திட்டம் 

வகுப்பு: 9.ஆம் வகுப்பு

பாடம்:   தமிழ்

தலைப்பு: கவிதைப்பேழை-இராவண காவியம்

                       கவிதைப்பேழை -நாச்சியார் திருமொழி

நாள்:   03-01-22  TO 08-01-22வரை (ஜனவரி முதல் வாரம்)

பொது நோக்கம்:

@ புதியன சிந்தித்துக் கவிதை டைக்கும்  திறன்பெறுதல்.

@ இலக்கியம் காட்டும் ஐவகை நிலங்களின் அழகை நுகர்ந்து அவற்றை விவரித்து எழுதுதல்

சிறப்பு நோக்கம்:

@ தமிழ் இலக்கியத் திரையில் மிகுதியான எழிலோவியங்களைச் சொல்லோவியங்களாகப் புலவர்கள் தீட்டி வைத்துள்ளனர். அவற்றில் சில காட்சிகளைக் கண்டு இன்புறுதல்

@  இலக்கியச் சொல்லாடல்களை இரசித்து மகிழ்தல்

@ அருஞ்சொற்களின் பொருளறிதல்

@ செய்யுளில் பொதிந்துள்ள இலக்கணக்கூறுகளை அறிதல்.

@  கற்பனை,அழகியல் இரண்டுமே கவிதைக்கு முக்கியம் என உணர்தல்

பாட அறிமுகம்(ஆர்வமூட்டல்)

Ø  எந்தெந்த வகையான நிலப்பகுதிகளில் மக்கள் வாழ்கிறார்கள் என்ற வினாவை மாணவர்களிடம் கேட்டு,அதற்கான விளக்கத்தை ஆசிரியரும் கொடுத்து,அதன் மூலம் பாட நோக்கத்தை உணர்த்தி மாணவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்துதல்.

Ø  இன்றைய திருமணநிகழ்வுகள் எவ்வாறு இருக்கும் என்பதைக்கூறி பாடத்தை அறிமுகம் செய்தல்

கற்பித்தல் துணைக்கருவிகள்:

      வலையொளிப்பதிவுகள், உயர்தொழில்நுட்ப ஆய்வகம், பாடநூல், சுண்ணக்கட்டி, கரும்பலகை முதலியன.

பாடப்பொருள் சுருக்கம்:

       இராவண காவியம்:

#  இயற்கைக்காட்சியினைப் பூக்கள் நிறைந்த மரக்கிளைகளில் அமர்ந்திருக்கும் குரங்கினம் மிரட்சியுடன் பார்க்கும்.

எல்லா இடங்களிலும் உள்ள பொருள்கள் மணம்கமழ்ந்து காணப்பட்டன

#   முக்குழல் இசையால் மேயும் பசுக் கூட்டங்களை ஒன்று சேர்த்தனர்.

#   கதிரடிக்கும் அதிர்வு தரும் ஓசையைக் கேட்டு மான்கள் அஞ்சி ஓடும்.

#   பாலைக்காய் வெடிக்கும் ஓசையைக் கேட்ட பருந்துகள் அச்சத்துடன் பறந்தோடின.

#   வளம் நிறைந்த மருதநில வயலில் காஞ்சி, வஞ்சி மலர்கள் பூத்து நிற்கும்.

#   பவளங்களையும் நல் இயல்பு தோன்றும் ஒளி முத்துகளையும் நெய்தல் நிலத்தவ ர் கடற்கரையி ல் கொண்டுவந்து குவிப்பர்.    

 நாச்சியார் திருமொழி

#   ஆடும் இளம் பெண்கள், கைகளில் விளக்கையும் கலசத்தையும் ஏந்தியவாறு வந்து எதிர்கொண்டு அழைக்கிறார்கள்.கண்ணன் பாதுகைகளை அணிந்து கொண்டு புவி அதிர மகிழ்ச்சியுடன் நடந்து வருகிறான்.

#   கண்ணன், முத்துகளையுடைய மாலைகள் தொங்கவிடப்பட்ட பந்தலின் கீழ், என்னைத் திருமணம் செய்து கொள்கிறான்.

#   இக்காட்சியைக் கனவில் கண்டதாக ஆண்டாள் கூறுகிறாள்.

ஆசிரியர் செயல்பாடு:

§  தற்காலத்தில் நில அமைப்பு எவ்வாறு உள்ளது என்பதைப்பற்றி விளக்க முற்படுதல்

§  ஐவகை நிலங்கள் இன்றளவில் எவ்வாறெல்லாம் மாற்றம் பெற்றுள்ளன என்பது குறித்த காணொளிகளைக் காண்பித்தல்.

§  தற்கால திருமணங்களில் நடைபெறும் நிகழ்வுகளை விளக்குதல்.

§  இலக்கணக்குறிப்பு,பகுபத உறுப்பிலக்கணம் உள்ளிட்டவற்றைத் தெளிவாக விளக்குதல்.

மாணவர் செயல்பாடு:

Ø  பண்டைய தமிழரின் வாழ்வும்,அவர்கள் வாழ்ந்த நிலத்தின் அமைப்பும் எவ்வாறு இருந்தது என்பதை உணர்தல்.

Ø  தங்களுடைய கற்பனை கலந்து கவிதை புனையும் ஆற்றலைப் பெறுதல்.

Ø  இலக்கணக்குறிப்பு அறிதல்,பகுபத உறுப்பிலக்கணம் அறிதல்.

கருத்துரு வரைபடம்

இராவண காவியம்


நாச்சியார் திருமொழி


வலுவூட்டல்:

         விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு பாடக் கருத்துகளை கூறி குறைத் தீர் கற்றலை மேற்கொள்ளல்.

மதிப்பீடு:

Ø  இராவண காவியத்தை இயற்றியவர் யார்?

Ø  மலையும்,மலை சார்ந்த பகுதியும் எவ்வாறு அழைக்கப்படும்?

Ø  நெய்தல் என்பது எந்நிலத்தைக் குறிக்கும்?

Ø  பன்னிரு ஆழ்வார்கள் வரிசையில் இடம்பெற்ற ஒரே பெண் யார்?

Ø  நாச்சியார் திருமொழியை இயற்றியவர் யார்?

Ø  தற்போது பெண்ணின் திருமண வயது என்ன?

தொடர்பணி:

·       பாடப்பகுதியில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கான விடைகளை  எழுதிவரச்செய்தல்.

 





கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை