10.ஆம் வகுப்பு இயல்-1 வினாடி வினா-1
தமிழ்ப்பொழில்
சரியான விடையைத் தேர்ந்தெடுக்க
- 1)எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்
- அ)எந்+தமிழ்+நா
- ஆ)எந்த+தமிழ்+நா
- இ)எம்+தமிழ்+நா
- ஈ)எந்தம்+தமிழ்+நா
- 2)மெத்தவணிகலன் என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது
- அ)வணிகக்கப்பல்களும்ஐம்பெருங்காப்பியங்களும்
- ஆ)பெரும்வணிகமும்,பெருங்கலன்களும்
- இ)ஐம்பெருங்காப்பியங்களும் அணிகலன்களும்
- ஈ)வணிகக்கப்பல்களும்,அணிகலன்களும்
- காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் குறிப்பன
- அ)இலையும் சருகும்
- ஆ)தோகையும் சண்டும்
- இ)தாளும் ஓலையும்
- ஈ)சருகும் சண்டும்
- 4) வேர்க்கடலை,மிளகாய் விதை,மாங்கொட்டை ஆகியவற்றைக்குறிக்கும்காய்வகை….
- அ)குலைவகை
- ஆ)மணிவகை
- இ)கொழுந்துவகை
- ஈ)இலைவகை
- 5)கேட்டவர்மகிழப்பாடியபாடல்-இத்தொடரில்இடம்பெற்றதொழிற்பெயரும்,வினையாலணையும் பெயரும்முறையே
- அ)பாடிய;கேட்டவர்
- ஆ)பாடல்;பாடிய
- இ)கேட்டவர்;பாடிய
- ஈ)பாடல்;கேட்டவர்
- 6)தமிழ் அரசாண்ட கண்டம்….
- அ)ஆசியா
- ஆ)குமரி
- இ)ஐரோப்பா
- ஈ)ஆப்பிரிக்கா
- 7)தென்னன் என்று குறிப்பிடப்பட்ட மன்னன்
- அ)பாண்டியன்
- ஆ)சேரன்
- இ)சோழன்
- ஈ)பல்லவன்
- 8)முன்னும் என்ற சொல்லின் பொருள்…..
- அ)முந்தும்
- ஆ)முன்னர்
- இ)முன்னரும்
- ஈ)பொங்கியெழும்
- 9)சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் என்று கூறியவர்……
- அ)பாரதியார்
- ஆ)ஜி.யு.போப்
- இ)க.சச்சிதானந்தன்
- ஈ)பாவலரேறு
- 10)பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர்
- அ)துரை.செந்தில்
- ஆ)துரை.வேலு
- இ)துரை.செல்வம்
- ஈ)துரை.மாணிக்கம்
- 11)`அன்னை மொழியே…`என்ற பாடல் இடம்பெற்றுள்ள கவிதைத்தொகுப்பு
- அ)மொழிவாழ்த்து
- ஆ)தேன்மொழி
- இ)கனிச்சாறு
- ஈ)தமிழ்ச்சிட்டு
- 12)தமிழுக்குக் கருவூலமாய் அமைந்த பெருஞ்சித்திரனாரின் நூல்
- அ)திருக்குறள் மெய்ப்பொருளுரை
- ஆ)கனிச்சாறு
- இ)பாவியக்கொத்து
- ஈ)மகபுகுவஞ்சி
- 13)நற்கணக்கே எனக்குறிப்பிடப்படும் நூல் தொகுப்பு
- அ)பதினெண்மேற்கணக்கு
- ஆ)பதினெண்கீழ்க்கணக்கு
- இ)நற்றிணை
- ஈ)சங்க இலக்கியம்
- 14)பாவலரேறு பாப்பத்தே எனக் குறிப்பிடும் நூல்
- அ)கனிச்சாறு
- ஆ)பத்துப்பாட்டு
- இ)எட்டுத்தொகை
- ஈ)பாப்பா பாட்டு
- 15)தும்பி என்பதன் பொருள்
- அ)வண்டு
- ஆ)தம்பி
- இ)ஈசல்
- ஈ)கரையான்
- 16)உந்தி உணர்வெழுப்ப உள்ளக் கனல் மூள-இவ்வடியில் காணும் நயம்
- அ)மோனை
- ஆ)எதுகை
- இ)முரண்
- ஈ)இயைபு
- 17)திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம் எனும் நூலை இயற்றியவர்
- அ)வீரமாமுனிவர்
- ஆ)ஜி.யு.போப்
- இ)கிருட்டிணப்பிள்ளை
- ஈ)கால்டுவெல்
- 18)நெட்டி,மிளகாய்ச்செடி முதலியவற்றின் அடி….
- அ)தாள்
- ஆ)தண்டு
- இ)கோள்
- ஈ)தூறு
- 19)மொழிஞாயிறு எனப் போற்றப்படுபவர்………
- அ)இளங்குமரனார்
- ஆ)தேவநேயப்பாவனார்
- இ)தாமோதரனார்
- ஈ)சுந்தரனார்
- 20)சிவியல் என்பது……ஐக் குறிக்கும்
- அ)சுருங்கிய காய்
- ஆ)சுருங்கிய பழம்
- இ)சூட்டினால் பழுத்த பிஞ்சு
- ஈ)அழுகிய பழம்
- 21)மரஞ்செடியினின்று பூ கீழே விழுந்த நிலையைக் குறிக்கும் சொல் எது?
- அ)அரும்பு
- ஆ)வீ
- இ)மலர்
- ஈ)செம்மல்
- 22)திருவள்ளுவர் தவச்சாலை அமைந்துள்ள இடம்
- அ)அல்லூர்
- ஆ)வள்ளூர்
- இ)நல்லூர்
- ஈ)நெல்லூர்
- 23)கொழுந்தாடை என்பது கரும்பினது------
- அ)இடைபகுதி
- ஆ)அடிபகுதி
- இ)கணுபகுதி
- ஈ)நுனிபகுதி
- 24)செம்மல் என்பது பூவின் ………….நிலையக் குறிக்கும்
- அ)தோற்ற
- ஆ)மலர்ந்த
- இ)வாடின
- ஈ)கீழே விழுந்த
- 25)இமைகளை மூடியபடி தமிழை எழுதும் ஆற்றல் பெற்றவர்……..
- அ)பாவாணர்
- ஆ)திரு.வி.க
- இ) பேரறிஞர் அண்ணா
- ஈ)பெரியார்
- 26)திருவள்ளுவர் தவச்சாலையை நிறுவியவர்
- அ)இரா.இளங்குமரனார்
- ஆ)பாவாணர்
- இ)திரு.வி.க
- ஈ)குன்றக்குடி அடிகளார்
- 27)தனித்தமிழ் இயக்கம் என்ற நூலை இயற்றியவர்……….
- அ)திரு.வி.க
- ஆ)மறைமலையடிகள்
- இ)இரா.இளங்குமரனார்
- ஈ)குன்றக்குடியடிகளார்
- 28)பலாப்பிஞ்சைக் குறிக்கும் சொல்லைத் தேர்ந்தெடுக்க
- அ)பிஞ்சு
- ஆ)வடு
- இ)மூசு
- ஈ)கவ்வை
- 29)கச்சல் என்பது பின்வருவனவற்றுள் எது?
- அ)மாம்பிஞ்சு
- ஆ)எள்பிஞ்சு
- இ)இளம்பாக்கு
- ஈ)வாழைப்பிஞ்சு
- 30)இளம்பயிர் வகையைக் குறிக்கும் சொல் தொகுப்பைத் தேர்ந்தெடு
- அ)கூலம்,பயறு,கடலை
- ஆ)வடு,மூசு,குரும்பை
- இ)தளிர்.முறி,குருத்து
- ஈ)நாற்று,கன்று.மடலி
- 31)பன்மொழிப்புலவர் எனப் போற்றப்படுபவர்……..
- அ)ம.பொ.சிவஞானம்
- ஆ)கா.அப்பாதுரையார்
- இ)சந்தக்கவிமணி
- ஈ)பெருஞ்சித்திரனார்
- 32)சம்பா நெல்லின் உள்வகைகள்…..
- அ)90
- ஆ)70
- இ)80
- ஈ)60
- 33)உலகத் தமிழ்க்கழத்தை நிறுவித் தலைவராக இருந்தவர்……….
- அ)தேவநேயப்பாவாணர்
- ஆ)திரு.வி.க ப்ப்ப்ன்ன் ந்
- இ)சச்சிதானந்தன்
- ஈ)கா.அப்பாதுரையார்
- 34)கார்டிலா எனும் நூல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ஆண்டு…….
- அ)1254
- ஆ)1654
- இ)1554
- ஈ)1754
- 35)மேலைநாட்டு எழுத்துருவில் அச்சேறிய முதல் இந்தியமொழி
- அ)சமற்கிருதம்
- ஆ)தமிழ்
- இ)இந்தி
- ஈ)பஞ்சாபி
A. Abraham
பதிலளிநீக்கு