6 TH STD TAMIL MODEL LESSON PLAN(FEBRUARY LAST & MARCH 1 ST WEEK)

 6.ஆம் வகுப்பு-தமிழ்

நாள்                 :           28-02-2022 முதல்  05-03-2022      

மாதம்               :             மார்ச்               

வாரம்               :           மார்ச் – முதல்  வாரம்                              

வகுப்பு              :            ஆறாம் வகுப்பு  

 பாடம்               :           தமிழ்                                                     

பாடத்தலைப்பு     :  பசிப்பிணி போக்கிய பாவை           

கருபொருள்                            :

Ø  பிறர் பசியைப் போக்கும் உயர் சிந்தனையை வளர்த்தல்

உட்பொருள்                           :

Ø  தனி மனிதனுக்கு உணவு அளிப்பது உயிர் கொடுப்பதற்கு சமம். அதுவே அறசிந்தனை.

Ø  மணிமேகலை, பல்லவத்தீவு நாடகம் வாயிலாக அறிதல்

கற்றல் மாதிரிகள்                   :

Ø  கரும்பலகை,சுண்ணக்கட்டி, சொல்லட்டை,கணினி,ஒளிப்பட வீழ்த்தி, காணொலிகள்,

கற்றல் விளைவுகள்                 :

Ø  பிறர் பசியைப் போக்கும் உயர் சிந்தனையை வளர்த்தல்.

ஆர்வமூட்டல்                          :

Ø  நீங்கள் உட்கொள்ளும் உணவுகள் யாவை?

Ø  உலகில் சிறந்த தானமாக கருதப்படுவது எது?

Ø  பசியின் கொடுமையை சில காணொளிக் காட்சிகள் கொண்டு காண்பித்து பாடத்தினை ஆர்வமூட்டல்

படித்தல்                                  :

Ø  நாடகப்பாங்கில் அமைந்த பாடப்பொருளினை மாணவர்கள் பங்கேற்றல் கற்றல் முறையில் படித்தல்

Ø  நிறுத்தற் குறி அறிந்து குரலில் ஏற்றத்தாழ்வுக் கொண்டுப் படித்தல்.

Ø  புதிய வார்த்தைகளை அடிக்கோடிடல்

Ø  புதிய சொற்களின் பொருளை அகராதிக் கொண்டு அறிதல்.

நினைவு வரைபடம்                 :

பசிப்பிணி போக்கிய பாவை




      

தொகுத்து வழங்குதல்             :

 

பசிப்பிணி போக்கிய பாவை

Ø  கதை மாந்தர் : மணிமேகலை, தீவதிலகை

Ø  இடம் : மணி பல்லவத் தீவு

Ø  கோமுகி : கோ – பசு , முகி – முகம், பசுமுகம் கொண்ட பொய்கை

Ø  வைகாசித் திங்கள் முழு நிலவு நாளில் இப்பொய்கை நீரின் மேல் ஓர் அரிய பாத்திரம் தோன்றும். அஃது ஆபுத்திரன் கையிலிருந்த ‘அமுதசுரபி’ என்னும் பாத்திரம் ஆகும்.

Ø  அமுத சுரபி சிறப்பு : அந்தப் பாத்திரத்தில் இட்ட உணவு எடுக்க எடுக்கக் குறையாமல் வளர்ந்து கொண்டே இருக்கும். அதனைக் கொண்டு எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் உணவு அளிக்கலாம்.

Ø  ஏ ழை மக்ளின் பசியைப் போக்குவதே மேலான அறம் . உணவு கொடுத்தவர்களே உயிரைக்  கொடுத்தவர்கள் என்பதை உணர்ந்துள்ளேன்

Ø  மணிமேகலை வேண்டுகோள் : பெற்றோரை மதித்தல், முதியோரைப் பேணல், உறவினர்களை அரவணைத்தல் போன்றவற்றை வலியுறுத்தும் அறநெறிக் கல்வியை அளிக்க வேண்டும்.

வலுவூட்டல்                             :

Ø  மாணவர்களை பங்கேற்று நடிக்க வைத்து அதன் வழியாக அறச்சிந்தனையை மாணவர்களுக்கு ஊட்டி பாடப்பொருளை வலுவூட்டல். 

மதிப்பீடு                                 :

Ø  கோமுகி என்பதன் பொருள் யாது?

Ø  மணிமேகலைக்கு கிடைத்த பாத்திரம் யாது?

Ø  அமுத சுரபி பாத்திரத்தின் பயன் யாது?

Ø  சிறையிலிருப்போருக்கு மணிமேகலை விடுக்கும் வேண்டுகோள் யாது?

Ø  அமுத சுரபி பாத்திரம் எப்போது கிடைக்கும்?

குறைதீர் கற்றல்                      :

Ø  பாடநூலில் உள்ள விரைவுத் துலங்கள் குறியீடு மற்றும் மனவரைபடம் கொண்டு மீண்டும் பாடப்பகுதியினை மீள்பார்வை செய்து குறை தீர் கற்றலை மேற்கொள்ளுதல்.

எழுத்துப் பயிற்சி                    :

Ø   பாடப்புத்தகத்தில் உள்ள வினாக்களுக்கு விடை எழுதி வருதல்.

மெல்லக் கற்போர் செயல்பாடு :

Ø   வண்ண எழுத்துகளின் உள்ள சொற்களை வாசித்தல்.

Ø   ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு விடை காணுதல்

Ø   மற்றவர்களுக்கு உணவளிக்கும் அறச்சிந்தனையை வளர்த்தல்.

தொடர் பணி                          :

Ø  பசிப்பிணி போக்கிய பாவை என்னும் நாடகத்தைக் கதை வடிவில் சுருக்கி எழுதுக

1 கருத்துகள்

நன்றி

புதியது பழையவை