9.ஆம் வகுப்பு-தமிழ்-
ஒருமதிப்பெண் வினா விடைகள்
வினாக்கள் - இயல் - 5
1.ஹண்டர் குழு முதன்முதலில் பெண்
கல்விக்குப் பரிந்துரை செய்த ஆண்டு
அ.1804
ஆ.1882
இ.1888
ஈ.1898
விடை: ஆ
2. எவர் இருவர் முதன் முதலாகப் பெண்களுக்கான பள்ளியைத் தொடங்கிவைத்தனர்
அ.முத்துலெட்சுமி, மூவலூர் இராமாமிர்தம்
ஆ.பண்டிதரமாபாய், ஜோதிராவ் பூலே
இ.பண்டிதரமாபாய், சாவித்திரிபாய் பூலே
ஈ.ஜோதிராவ் பூலே, சாவித்திரிபாய் பூலே
விடை: ஈ
3. இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் யார்?
அ.முத்துலெட்சுமி
ஆ.மலாலா
இ.சாவித்திரிபாய் பூலே
ஈ.நீலாம்பிகை அம்மையார்
விடை: இ
4. சாவித்திரிபாய் பூலே எந்த ஆண்டு பெண்களுக்கெனத் தொடங்கப்பட்ட பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினர்
அ.1848
ஆ.1847
இ.1845
ஈ.1888
விடை: அ
5.கோத்தாரிக் கல்வி குழு எந்த ஆண்டில் மகளிர் கல்வியை வலியுறுத்தியது?
அ.1974
ஆ.1984
இ.1964
ஈ.1954
விடை: இ
6. ______ என்பது பொருட்செல்வத்தாலோ வீரத்தாலோ அமைவதன்று
அ.உயிர்
ஆ.நிலம்
இ.பெண்
ஈ.வாழ்க்கை
விடை: ஈ
7. ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம்?
அ.கன்னிமாரா நூலகம்
ஆ.நடுவண் நூலகம்
இ.தேசிய நூலகம்
ஈ.சரசுவதி மாகல் நூலகம்
விடை: ஈ
8. இந்திய மொழிகள் அனைத்திலும் உள்ள ஓலைச்சுவடிகள் எங்கு பாதுகாக்கப்பட்டுள்ளன
அ.சரசுவதி மாகல் நூலகம்
ஆ.தேசிய நூலகம்
இ.கின்னிமாரா நூலகம்
ஈ.நடுவண் நூலகம்
விடை: அ
9. ஓகார இடைச்சொல் எத்தனை பொருளில் வரும்
அ. 2
ஆ.3
இ.5
ஈ.8
விடை: ஈ
10. தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் யார்?
அ. பண்டித ரமாபாய்
ஆ.முத்துலட்சுமி அம்மையார் இ.சாவித்திரிபாய் பூலே
ஈ.நீலாம்பிகை அம்மையார்
விடை: ஆ
11. மறைமலை அடிகளின் மகள் யார்?
அ. ஈ.வெ.ரா. நாகம்மை
ஆ. சிவகாமி அம்மையார்
இ. நீலாம்பிகை அம்மையார்
ஈ. சாவித்திரிபாய் பூலே
விடை: இ
12. குழந்தை திருமணத்தை எதிர்த்து சாரதா சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு எது?
அ. 1910
ஆ. 1915
இ. 1929
ஈ. 1925
விடை: இ
13. ஆக்கல் - இலக்கணக் குறிப்பு எழுதுக
அ. உரிச்சொல் தொடர்
ஆ. உவமை உருபு
இ. தொழிற் பெயர்
ஈ. உம்மைத்தொகை
விடை: இ
15. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் எது?
அ. தாவா
ஆ. பூவாது
இ. மூவாது
ஈ. விதையாமை
விடை: அ
16. சிறுபஞ்சமூலம் என்பது எத்தனை சிறிய வேர்கள் என்பது இதன் பொருள்?
அ. 1
ஆ. 2
இ. 4
ஈ. 5
விடை: ஈ
17. 11வது வயதில் கவிதை எழுதி "பாரதி" எனும் பட்டம் பெற்றவர்?
அ. வள்ளுவர்
ஆ. காந்தியடிகள்
இ. பாரதியார்
ஈ. மாவீரன் அலெக்சாண்டர்
விடை: இ
18. உலகமெங்கும் பயணம் செய்யும் பட்டறிவைத் தருவது எது?
அ. அறிவியல்
ஆ. இசை
இ. நூலகம்
ஈ. வரலாறு
விடை:இ
19. ஒரு நாட்டை உலகம் மதிப்பது எதனால்?
அ. மலை கண்டு
ஆ. நீதி கண்டு
இ. மாநிதி கண்டு
ஈ. மனவளம் கண்டு
விடை:ஈ
20. எந்த ஆண்டு அறிஞர் அண்ணா உருவம் பொறிக்கப்பட்ட ஐந்து ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டது?
அ. 2010
ஆ. 2007
இ. 2005
ஈ. 2009
விடை: ஈ
21. அண்ணா நூற்றாண்டு நூலகம் எந்த ஆண்டு உருவானது?
அ. 2006
ஆ. 2012
இ. 2010
ஈ. 2004
விடை: இ
22. எதற்கு முதலிடம் தர வேண்டும் என்று அண்ணா கூறுகிறார்?
அ. அலங்கார பொருள்
ஆ. போக பொருள்
இ. புத்தகசாலை
ஈ. பீரோக்கள்
விடை: இ
23. எதை அமைத்துக்கொண்டால் நாட்டுக்கு நல்ல நிலை ஏற்படும் என்று அண்ணா கூறுகிறார்?
அ. பூகோள ஏடுகள்
ஆ. சரித ஏடுகள்
இ. வீட்டிற்கோர் திருக்குறள்
ஈ. வீட்டிற்கோர் புத்தகச்சாலை
விடை: ஈ
24. அண்ணாவை எவ்வாறு அழைத்தனர்?
அ. பேச்சாளர்
ஆ. அறிவாளர்
இ. தென்னகத்து பெர்னாட்ஷா
ஈ. எழுத்தாளர்
விடை: இ
25. தமிழ் நூல்கள் அதிகம் உள்ள நூலகம் எது?
அ. சரஸ்வதி மகால் நூலகம்
ஆ. நடுவன் நூலகம்
இ. தேசிய நூலகம்
ஈ. கன்னிமாரா நூலகம்
விடை: ஈ
26. உலகின் மிகப் பெரிய நூலகம் என்ற பெருமையை தாங்கி நிற்பது எது?
அ. தேசிய நூலகம்
ஆ. லைப்ரரி ஆப் காங்கிரஸ்
இ. நடுவன் நூலகம்
ஈ. கன்னிமாரா நூலகம்
விடை: ஆ
27. தேசிய நூலக நாள் எது?
அ. ஆகஸ்ட் 1
ஆ. மே 5
இ. ஏப்ரல் 4
ஈ. ஆகஸ்ட் 9
விடை: ஈ
28. சாகித்திய அகாதமி விருது பெற்ற நாடக நூல் எது?
அ. பாண்டியன் பரிசு
ஆ. குடும்ப விளக்கு
இ. அழகின் சிரிப்பு
ஈ. பிசிராந்தையார்
விடை: ஈ
29. இருமொழி சட்டத்தை உருவாக்கியவர் யார்?
அ. அறிஞர் அண்ணா
ஆ. காமராஜர்
இ. காந்தியடிகள்
ஈ. ஜவஹர்லால் நேரு
விடை: அ
30. சென்னை மாகாணத்தை "தமிழ்நாடு" என்று மாற்றியவர் யார்?
அ. காமராஜர்
ஆ. காந்தியடிகள்
இ. எம்.ஜி.ஆர்
ஈ. அறிஞர் அண்ணா
விடை:ஈ
31. இந்திய நூலகவியலின் தந்தை யார்?
அ. சீர்காழி இரா. அரங்கநாதன்
ஆ. காமராஜர்
இ. காந்தியடிகள்
ஈ. அறிஞர் அண்ணா
விடை:அ
32. சாகித்திய அகாதமி விருது பெற்ற சிற்பியன கவிதை நூல் எது?
அ. ஒரு கிராமத்து நதி
ஆ. கருப்பு மலர்கள்
இ. கிழவனும் கடலும்
ஈ. தண்ணீர் தண்ணீர்
விடை: அ
33. நா. காமராஜரின் கவிதை நூல் எது?
அ.கருப்பு மலர்கள்
ஆ.ஒரு கிராமத்து நதி
இ.கிழவனும் கடலும்
ஈ.தண்ணீர் தண்ணீர்
விடை: அ
34. எஸ் ராமகிருஷ்ணனின் சிறார் நாவல் எது?
அ. சாக்ரட்டீஸின் சிவப்பு நூலகம்
ஆ. தண்ணீர் தண்ணீர்
இ. கிழவனும் கடலும்
ஈ. ஒரு கிராமத்து நதி
விடை: அ
35. எந்த சொற்கள் தமிழில் மிகுதியாக இல்லை?
அ. பெயர்ச்சொற்கள்
ஆ. இடைச்சொற்கள்
இ. வினைச்சொற்கள்
ஈ.. உரிச்சொற்கள்
விடை: ஆ
36. இராஜேஸ்வரி அம்மையார் எந்த கல்லூரியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றினார்
அ. அரசு உயர்நிலைப்பள்ளி
ஆ. ராணி மேரி கல்லூரி
இ. ஜெயா கல்லூரி
ஈ. அரசு கல்லூரி
விடை: ஆ
37. பாகிஸ்தானில் பெண் கல்வி வேண்டுமென போராட்டக்களத்தில் இறங்கியபோது மலாலா வயது
அ. 10
ஆ. 8
இ. 12
ஈ. 20
விடை: இ
38.சங்ககாலப் பெண்பாற் புலவர் யார்?
அ.ஆதிமந்தியார்
ஆ.முத்துலெட்சுமி
இ.மூவலூர் இராமாமிர்தம்
ஈ.ஆண்டாள்
விடை:அ
39. மின்னாள் என்பதன் பொருள் யாது?
அ.உலகம்
ஆ.பெரியகல்
இ. ஒளிரமாட்டாள்
ஈ. போன்றவளை
விடை: இ
40. கல்வியறிவு இல்லாத பெண்கள் எதை போன்றவர்கள்?
அ.பெரியகடல்
ஆ.உலகம்
இ. மின்னல்போல்
ஈ. பண்படாத நிலம்
விடை: ஈ
41. பாரதிதாசனின் கவிதைகள் அனைத்தும் ______ என்னும் பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன
அ. பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள்
ஆ. பாவேந்தர் கவிதைகள்
இ. பாரதிதாசன் கவிதைகள்
ஈ. கவிதைகள்
விடை: அ
42. பாரதிதாசனின் எந்த நூலுக்கு சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது
அ. பாண்டியன் பரிசு
ஆ. அழகின் சிரிப்பு
இ. குடும்ப விளக்கு
ஈ. பிசிராந்தையார்
விடை: ஈ
43. தமிழில் சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து எந்த நூல்கள் தோன்றின
அ. சிறுபஞ்சமூலம்
ஆ. நீதி நூல்கள்
இ. பதினெண்கீழ்க்கணக்கு
ஈ. கண்டங்கத்திரி
விடை: ஆ
44. வீக்டர் ஹியூகோ எந்த வயதில் பிரெஞ்சு இலக்கியக் கழகத்துக்குத் தமது கவிதைகளை எழுதியனுப்பினார்
அ. 13
ஆ. 15
இ. 16
ஈ. 14
விடை: ஆ
45. பாரதிதாசன் இயற்றிய பிசிராந்தையார் நாடக நூலுக்கு எந்த விருது வழங்கப்பட்டது
அ. பத்மஸ்ரீ விருது
ஆ. பாரத ரத்னா விருது
இ. சாகித்திய அகாதமி விருது
ஈ. அர்ஜுனா விருது
விடை: இ
46. 15 வயதில் பிரெஞ்சு இலக்கியக் கழகத்துக்குத் தமது கவிதைகளை எழுதி அனுப்பியவர் யார்?
அ. வள்ளலார்
ஆ. பாரதியார்
இ. கலிலியோ
ஈ. வீக்டர் ஹியூகோ
விடை: ஈ
47. மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு - என்ற பொன்மொழியைக் கூறியவர்
அ. அறிஞர் அண்ணா
ஆ. வள்ளலார்
இ. பாரதியார்
ஈ. பாரதிதாசன்
விடை: அ
48. 2010 ஆம் ஆண்டு அண்ணா நூற்றாண்டு நிறைவடைந்ததை நினைவுபடுத்தும் வண்ணம் தமிழ்நாடு அரசு எதனை உருவாக்கியது?
அ. நூலகம்
ஆ.பள்ளி
இ.கல்லூரி
ஈ.சிலை
விடை: அ
49. அண்ணா நூற்றாண்டு நிறைவடைந்ததை நினைவுபடுத்தும் வண்ணம் தமிழ்நாடு அரசு உருவாக்கிய நூலகத்தின் பெயர் என்ன?
அ. தேசிய நூலகம்
ஆ.நடுவண் நூலகம்
இ.அண்ணா நூலகம்
ஈ.அண்ணா நூற்றாண்டு நூலகம்
விடை: ஈ
50. உறு, தவ, நனி என்ற மூன்று உரிச்சொற்களும் _______ எனும் பொருளில் வருகின்றன
அ. குறிப்பு
ஆ.மிகுதி
இ.பண்பு
ஈ.இசை
விடை: ஆ
51. வீட்டிற்கோர் திருக்குறள் புத்தகம் கட்டாயமாக இருக்கவேண்டும் என்று கூறியவர் யார்?
அ. வள்ளலார்
ஆ.அறிஞர் அண்ணா
இ.பாரதிதாசன்
ஈ.பாரதியார்
விடை: ஆ
52. ஒரு சொல் பல பொருள்களுக்கு உரியதாய் வருவன எச்சொற்கள்?
அ. பெயர்சொற்கள்
ஆ.உரிச் சொற்கள்
இ.வினைச்சொற்கள்
ஈ.இடைச்சொற்கள்
விடை: ஆ
53. மழ என்பவற்றிலிருந்து உருவானவை எச்சொற்கள்?
அ. மழ
ஆ.மழலை
இ.மழந்தை
ஈ.மரம்
விடை: ஆ
54. பல சொல் ஒரு பொருளுக்கு உரியதாய் வருவன எச்சொற்கள்?
அ. பெயர்ச்சொற்கள்
ஆ. வினைச்சொற்கள்
இ. உரிச்சொற்கள்
ஈ. இடைச்சொற்கள்
விடை:இ
55. பிழை நீக்கி எழுதுக:-
நிர்மலா சிறந்த இசை வல்லுநர் வேண்டும்
அ. நிர்மலா சிறந்த இசை வல்லுநராக வேண்டும்
ஆ. சிறந்த இசை நிர்மலா தான்
இ. நிர்மலா தான் சிறந்த இசை வல்லுநர்
ஈ. இசை வல்லுநர் நிர்மலா தான்
விடை: அ
56. அடையாற்றில் 1930-ல் அவ்வை இல்லம் நிறுவியவர்
அ. முத்துலட்சுமி
ஆ.மலாலா
இ.பண்டித ரமாபாய்
ஈ.சாவித்திரிபாய் பூலே
விடை: அ
57. கோத்தாரிக் கல்விக் குழு _____ கல்வியை வலியுறுத்தியது?
அ. குழந்தைகள்
ஆ.ஆதரவற்றோர்
இ.மகளிர்
ஈ.குழந்தை தொழிலாளர்
விடை: இ
58. கைலாஷ் சத்யார்த்தி நோபல் பரிசு பெற்ற ஆண்டு?
அ. 2010
ஆ.2018
இ.2014
ஈ.2022
விடை: இ
59. பைசா நகரச் சாய்ந்த கோபுரத்தின் விளக்கு ஊசலாடுவது குறித்து ஆராய்ந்தவர்?
அ. பாரதியார்
ஆ.பாரதிதாசன்
இ.காரியாசன்
ஈ.கலீலியோ
விடை:ஈ
60. சிறுபஞ்சமூலத்தில் பொருள் _____
அ. ஐந்து பெரிய வேர்கள்
ஆ. ஐந்து சிறிய வேர்கள்
இ. ஐந்து வேர்கள்
ஈ. ஐந்து ஆணிவேர்கள்
விடை: ஆ
61. 'தென்னகத்து பெர்னாட்ஷா' என்று அழைக்கப்பட்டவர் யார்?
அ.பாரதியார்
ஆ.அண்ணா
இ.பாரதிதாசன்
ஈ.வள்ளலார்
விடை: ஆ
62. உலகில் சாகாவரம் பெற்ற பொருள்கள் புத்தகங்களே என்று கூறியவர்
அ.ஆபிரகாம் லிங்கன்
ஆ.கவிமணி
இ.அண்ணா
ஈ.கதே
விடை: ஈ
62. ஈ.வெ.ரா - நாகம்மை இலவசக் கல்வி உதவித்திட்டம் எந்த படிப்பிற்கு உரியது?
அ.பள்ளிப்படிப்பு
ஆ.பட்டமேற்படிப்பு
இ.பட்டப்படிப்பு
ஈ.தொழிற்கல்வி
விடை: ஆ
63. ஜோதிராவ் பூலே, சாவித்திரிபாய் பூலே முதன்முதலாகப் பெண்களுக்குப் பள்ளி தொடங்கிய மாநிலம்
அ.தமிழ் நாடு
ஆ.பீகார்
இ.மராட்டியம்
ஈ.உத்திரப் பிரதேசம்
விடை:இ
64. பின்வரும் எந்த இதழிலில் அண்ணா ஆசிரியராகப் பணியாற்றவில்லை?
அ.நம்நாடு
ஆ.திராவிடநாடு
இ.மாலை மணி
ஈ.விடுதலை
விடை: ஈ
65. இருமொழிச் சட்டத்தை உருவாக்கியவர்?
அ.ஆபிரகாம் லிங்கன்
ஆ.அண்ணா
இ.கதே
ஈ.பெரியார்
விடை: ஆ
66. சீர்காழி இரா.அரங்கநாதன் பிறந்த நாள் எது?
அ.ஆகஸ்ட் 6
ஆ.ஆகஸ்ட் 8
இ.ஆகஸ்ட் 7
ஈ. ஆகஸ்ட் 9
விடை: ஈ
67. 'அன்று' என்பது எதற்கு உரியது?
அ.ஒருமை
ஆ.தன்மை
இ.பன்மை
ஈ.முன்னிலை
விடை:அ
68. வேற்றுமை உருபுகளில் தவறானது எது?
அ.ஐ
ஆ.ஆல்
இ.அது
ஈ.கிறு
விடை: ஈ
69. பெயரையும் வினையையும் சார்ந்து இயல்பை உடையன எது?
அ.பெயர் சொற்கள்
ஆ.இடைச் சொற்கள்
இ.வினைச்சொற்கள்
ஈ.உரிச்சொற்கள்
விடை:ஆ
70. "இடைச் சொற்கள் தாமாகத் தனித்து இயங்கும் இயல்பை உடையன அல்ல" என்று கூறியவர்?
அ.கம்பர்
ஆ.வள்ளலார்
இ.தொல்காப்பியர்
ஈ.காரியாசான்
விடை:இ
71. "நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கிவந்து என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்"என்றவர்
அ.ஆபிரகாம் விங்கன்
ஆ.கவிமணி
இ.அண்ணா
ஈ.பாரதியார்
விடை:அ
PDF வடிவில் பதிவிறக்க👇