10.ஆம் வகுப்பு
தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 13-06-2022 முதல் 17-06-2022 மாதம் : ஜூன்
வாரம் : மூன்றாம் வாரம் வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ் பாடத்தலைப்பு : 1. அன்னை மொழியே
2. தமிழ்ச்சொல் வளம்
கருபொருள் :
Ø வேறுபட்ட கவிதை வடிவங்களைப் படித்து பொருளுணர்தல்
Ø தமிழ்ச்சொல் வளத்தை அறிந்து பயன்படுத்துதல்
உட்பொருள் :
Ø பாவலரேறு பற்றி அறிதல்
Ø தமிழ்மொழியின் சிறப்பைப் பற்றி அறிதல்.
Ø அன்னை மொழியே பாடலின் பொருளை உள் வாங்குதல்
Ø தமிழ்ச்சொல் வளத்தை அறிதல்
Ø தாவரத்தின் சினைப்பெயர்களை அறிதல்
அறிமுகம் :
Ø தமிழின் சிறப்பை உணர்த்தும் இனியப் பாடல் பாடி அறிமுகம் செய்தல்
Ø அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் தாவரங்களின் உறுப்பைக் குறிக்கும் தமிழ்ச்சொற்களை கரும்பலகையில் எழுத வைத்தல்.
கற்றல் மாதிரிகள் :
Ø கரும்பலகை,சுண்ணக்கட்டி, சொல்லட்டை
முக்கிய கருத்துகள் மற்றும்
பாடச் சுருக்கம் :
Ø பெருமைகள் மிகுந்த தமிழை தலை தாழ்த்தி வணங்குகிறோம்.
Ø செழுமை மிக்க தமிழே ! எமக்குயிரே !
சொல்லுதற்கரிய நின் பெருமைதனை
என்னுடைய தமிழ் நாக்கு எவ்வாறுதான்
விரித்துரைக்கும் ? பழம்பெரு மையு ம்
தனக்கெனத் தனிச்சிறப்பும் இலக்கிய
வளமும் கொண்டண்ட தமிழே !
Ø பாடலில் உள்ள நயங்கள் அறிதல் ( எதுகை, மோனை,இயைபு, பொருள் )
Ø தமிழின் சொல்வளத்தையும்,பொருள் வளத்தையும் அறிதல்
§ அடிவகை
§ கிளைப்பிரிவு
§ இலைவகை
§ கொழுந்து வகை
§ பிஞ்சு வகை
§ மணி வகை
ஆசிரியர் செயல்பாடு :
Ø வகுப்பறை சூழலை மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.
Ø பெருஞ்சித்திரனாரின் சிறப்புகல்;
Ø தமிழின் பெருமையை அறிதல்.
Ø கவிதையின் நயங்களை உணர்த்துதல்
Ø தாவரங்களின் சினைப்பெயர்களைப் பற்றிக் கூறல்
Ø அன்றாடம் வாழ்வில் பயன்படுத்தக் கூடிய சொற்களைக் கொண்டு தமிழ்ச்சொல் வளத்தைக் கூறல்
Ø தமிழ் ஆழ்ந்த சொல் வளமுடையது என்பதை உணர்த்துதல்
Ø வித்துவகை , வேர்வகை , தாள் வகை ,காய்ந்த இலைவகை , இலைக்கா ம்பு வகை , பூமடல் வகை , அரும்பு வகை , பூக்கா ம்பு வகை ,இதழ்வகை , காய்வகை , கனி வகை , உள்ளீட்டு வகை , தா வரக் கழிவு வகை , விதைத்தோ ல்வகை , பதர் வகை , பயிர் வகை , கொடி வகை , மர வகை , கரும்பு வகை , காய்ந்த பயிர் வகை ஆகியவற்றை விளக்குதல்.
மாணவர் செயல்பாடு :
Ø அன்னை மொழியே – மனப்பாடப் பாடலை பிழையின்றி வாசித்தல்
Ø பாவலரேறின் சிறப்புகளை அறிதல்
Øஅன்னை மொழியே- கவிதையில் உள்ள நயங்களை அறிதல்
Ø சொல் அட்டைகள் கொண்டு தொடர் உருவாக்குதல்
Ø தமிழ்ச்சொல் வள்;அம் பற்றி அறிதல்
Øதாவரங்களின் சினைப்பெயர்களை அறிதல்
வலுவூட்டல் :
Ø கவிதையை மீண்டும் வாசித்தல்
Ø அன்றாய வாழ்வில் பயன்படுத்தும் கலைச்சொற்களைப் பற்றி உரையாடி கற்றலுக்கு வலுவூட்டல்.
குறைதீர் கற்றல் :
Ø மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு பாடப்பொருளை மீண்டும் கற்பித்து குறைதீர் கற்றல் மேற்கொள்ளல்.
மெல்ல கற்போர் செயல்பாடுகள்:
Ø கவிதையில் உள்ள எதுகை,மோனை நயங்களை அறிதல், எடுத்து எழுதுதல்
Ø எளிய சொற்கள் கொண்டு தொடர் உருவாக்குதல்
மதிப்பீடு :
Ø அன்னை மொழியே பாடலின் ஆசிரியர் யார்?
Ø பாப்பத்தே என்பதன் பொருள் யாது?
Ø கவிதையில் உள்ள மோனை சொற்கள் யாவை?
Ø தமிழ்ச்சொல் வளம் என்ற கட்டுரையை இயற்றியவர் யார்?
Ø சம்பா நெல் வகைகள் சிலவற்றைக் கூறுக
தொடர்பணி:
Ø பாடப்பகுதியில் உள்ள வினாக்களுக்கு விடை எழுதி வருக.