9 TH STD TAMIL MODEL LESSON PLAN -AUGUST 4 TH WEEK

  9 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        : 22-08-2022 முதல் 26-08-2022         

மாதம்          ஆகஸ்டு          

வாரம்     :   நான்காம் வாரம்                                               

வகுப்பு  :   ஒன்பதாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்                                                         

பாடத்தலைப்பு     :  1. அகழாய்வு

                                             2.வல்லினம் மிகும் இடங்கள்

                                             3.திருக்குறள்

1.கற்றல் நோக்கங்கள்   :

      #இலக்கணக்கூறுகளை அறிந்து பயன்படுத்துதல்.

      #அறநூலில் சொல்லப்பட்ட நன்னெறிக்கருத்துகளின் முறைமையையும், செப்பத்தையும் படித்துப் புரிந்து கொள்ளுதல்
    2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

          Ø  சில வல்லினம் மிகும், மிகா இடங்களின் தொடர்களை எழுதி அதன் பொருள் வேறுபாடு கூறி அறிமுகம் செய்தல்.

       Ø  திருக்குறள் சிறப்புக் கூறி அறிமுகம் செய்தல்

4.பாடச் சுருக்கம்  :             

       Ø  மொழிக்கு முதலில் வரும் க,ச,த,ப எழுத்துகள்

        Ø  தோன்றல் விகாரப்புணர்ச்சியில் வல்லினம் மிகும் 

        Ø  சுட்டெழுத்து பின் வல்லினம் மிகும்.

        Ø  இரண்டாம் வேற்றுமை உருபு வேற்றுமை விரியில் வல்லினம் மிகும்

        Ø  நான்காம் வேற்றுமை உருபு வேற்றுமை விரியில் வல்லினம் மிகும்

        Ø  என,ஆக எனும் சொல்லுருபுகளின் பின் வல்லினம் மிகும்.

        Ø  மேலும் சில வல்லினம் மிகும் இடங்கள் அறிதல்

        Ø  திருக்குறள் பெருமை,சிறப்பு பற்றி அறிதல்

      Ø  பொறையுடைமை,தீவினை அச்சம், கேள்வி, தெரிந்து தெளிதல், ஒற்றாடல், வினைத்தூய்மை, பழைமை, தீ நட்பு, பேதைமை – அதிகார குறள்களின் விளக்கம்.

5.ஆசிரியர் செயல்பாடு              :

       Ø  பொருள் வேறுபாட்டை அறிய தொடர்களை எழுதி விளக்குதல்.

      Ø  தோன்றல் விகாரம் பற்றி கூறல்

      Ø  வல்லினம் மிகும் இடங்களை உதாரணங்களுடன் விளக்குதல்

      Ø  திருக்குறள் சிறப்புகள் பற்றி கூறல்.

       Ø  திருக்குறளை சீர் பிரித்து வாசித்தல்.

       Ø  திருக்குறளுக்கான பொருள் விளக்கம் கூறல்

       Ø  மனப்பாடக் குறளை இனிய இராகத்தில் பாடுதல்

        Ø  திருக்குறள் கூறும் அறக்கருத்துகளை அன்றாட வாழ்வியல் நடைமுறையுடன் ஒப்பிடல்.

6.கருத்துரு வரைபடம்:


       வல்லினம் மிகும் இடங்கள்



  திருக்குறள்


7.மாணவர் செயல்பாடு:

Ø  புணர்ச்சி பற்றி அறிந்து கொள்ளுதல்

Ø  புணர்ச்சியின் வகைகள் பற்றி அறிதல்

Ø  வல்லினம் பற்றி அறிதல்

Ø  வல்லினம் மிகும் இடங்கள் குறித்து உதாரணங்களுடன் அறிதல்.

Ø  திருக்குறள் சிறப்பு உணர்தல்.

Ø  திருக்குறளினை சீர் பிரித்து வாசித்தல்

Ø  திருக்குறளின் பொருள் உணர்தல்

                                               Ø  திருக்குறளினை இனிய இராகத்தில் பாடுதல்.

8.வலுவூட்டல்:

     விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

9.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :

1.வல்லின மெய்கள் யாவை?
2.பொறை என்பது யாது?
இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)

1.மிகை நாடி மிக்க கொளல் விளக்குக  
2.வல்லினம் மிகும் இடங்களுக்குச் சான்று தருக.

உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :

1.. கட்டளைக்கல் என வள்ளுவர் கூறக்காரணம் யாது?

10.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

11.தொடர்பணி

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

12.கற்றல் விளைவு:

     #இலக்கணக்கூறுகளை அறிந்து பயன்படுத்துதல்.

      #அறநூலில் சொல்லப்பட்ட நன்னெறிக்கருத்துகளின் முறைமையையும்,செப்பத்தையும் படித்துப் புரிந்து கொள்ளுதல்




கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை