9 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 22-08-2022 முதல் 26-08-2022
மாதம் : ஆகஸ்டு
வாரம் : நான்காம் வாரம்
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. அகழாய்வு
2.வல்லினம் மிகும் இடங்கள்
3.திருக்குறள்
1.கற்றல் நோக்கங்கள் :
#இலக்கணக்கூறுகளை அறிந்து பயன்படுத்துதல்.
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
Ø சில வல்லினம் மிகும், மிகா இடங்களின் தொடர்களை எழுதி அதன் பொருள் வேறுபாடு கூறி அறிமுகம் செய்தல்.
Ø திருக்குறள் சிறப்புக் கூறி அறிமுகம் செய்தல்
4.பாடச் சுருக்கம் :
Ø மொழிக்கு முதலில் வரும் க,ச,த,ப எழுத்துகள்
Ø தோன்றல் விகாரப்புணர்ச்சியில் வல்லினம் மிகும்
Ø சுட்டெழுத்து பின் வல்லினம் மிகும்.
Ø இரண்டாம் வேற்றுமை உருபு வேற்றுமை விரியில் வல்லினம் மிகும்
Ø நான்காம் வேற்றுமை உருபு வேற்றுமை விரியில் வல்லினம் மிகும்
Ø என,ஆக எனும் சொல்லுருபுகளின் பின் வல்லினம் மிகும்.
Ø மேலும் சில வல்லினம் மிகும் இடங்கள் அறிதல்
Ø திருக்குறள் பெருமை,சிறப்பு பற்றி அறிதல்
Ø பொறையுடைமை,தீவினை அச்சம், கேள்வி, தெரிந்து தெளிதல், ஒற்றாடல், வினைத்தூய்மை, பழைமை, தீ நட்பு, பேதைமை – அதிகார குறள்களின் விளக்கம்.
5.ஆசிரியர் செயல்பாடு :
Ø பொருள் வேறுபாட்டை அறிய தொடர்களை எழுதி விளக்குதல்.
Ø தோன்றல் விகாரம் பற்றி கூறல்
Ø வல்லினம் மிகும் இடங்களை உதாரணங்களுடன் விளக்குதல்
Ø திருக்குறள் சிறப்புகள் பற்றி கூறல்.
Ø திருக்குறளை சீர் பிரித்து வாசித்தல்.
Ø திருக்குறளுக்கான பொருள் விளக்கம் கூறல்
Ø மனப்பாடக் குறளை இனிய இராகத்தில் பாடுதல்
Ø திருக்குறள் கூறும் அறக்கருத்துகளை அன்றாட வாழ்வியல் நடைமுறையுடன் ஒப்பிடல்.
6.கருத்துரு வரைபடம்:
வல்லினம் மிகும் இடங்கள்
திருக்குறள்
7.மாணவர் செயல்பாடு:
Ø புணர்ச்சி பற்றி அறிந்து கொள்ளுதல்
Ø புணர்ச்சியின் வகைகள் பற்றி அறிதல்
Ø வல்லினம் பற்றி அறிதல்
Ø வல்லினம் மிகும் இடங்கள் குறித்து உதாரணங்களுடன் அறிதல்.
Ø திருக்குறள் சிறப்பு உணர்தல்.
Ø திருக்குறளினை சீர் பிரித்து வாசித்தல்
Ø திருக்குறளின் பொருள் உணர்தல்
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
10.குறைதீர் கற்றல்:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு:
#இலக்கணக்கூறுகளை அறிந்து பயன்படுத்துதல்.