முழு ஆண்டுப்பொதுத் தேர்வு-2024 ,
இராணிப்பேட்டை , வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டம்
வினாத்தாளைப் பதிவிறக்கம் செய்ய
முழு ஆண்டுப்பொதுத் தேர்வு-2024 ,
இராணிப்பேட்டை மாவட்டம்
7.
ஆம் வகுப்பு தமிழ்- விடைக்குறிப்புகள்
i. அனைத்து
வினாக்களுக்கும் விடையளி. அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
4X1=4 |
||||||||
வி.எண் |
விடைகள் |
மதிப்பெண் |
||||||
1 |
அ. மாரி |
1 |
||||||
2 |
ஈ. நாற்று |
1 |
||||||
3 |
ஈ. தாமிரபரணி |
1 |
||||||
4 |
ஆ. எளிமை |
1 |
||||||
ஆ) பொருள்தருக
2X1=2 |
||||||||
5 |
உலகம் |
1 |
||||||
6 |
அமைதி |
1 |
||||||
இ) பிரித்து எழுதுக
2X1=2 |
||||||||
7 |
ஞானம்
+ சுடர் |
1 |
||||||
8 |
இனிமை + சொல் |
1 |
||||||
ஈ) பொருத்துக 4X1=4 |
||||||||
9 |
அன்பு - தகளி |
1 |
||||||
10 |
ஆர்வம் - நெய் |
1 |
||||||
11 |
கதிர் - அறுத்தல் |
1 |
||||||
12 |
களை - வன்சொல் |
1 |
||||||
i i. எவையேனும்
ஐந்து வினாக்களுக்கு விடையளி. 5X2=10 |
||||||||
13 |
அங்கவை,
சங்கவை |
2 |
||||||
14 |
உழவர்கள் நாற்று பறிக்கும்போது நண்டு பிடித்தனர் |
2 |
||||||
15 |
மணிமுத்தாறு, சிற்றாறு, காரையாறு, சேர்வலாறு, கடனாநதி |
4 |
||||||
16 |
மற்றவர்களுக்கு
வழங்கி மகிழ்வித்து மகிழ, வாழ்வித்து வாழப் பொருள் தேவை என்பதே பொருளீட்டலுக்கான
நோக்கமாகும். |
2 |
||||||
17 |
வேண்டிய
பொருள்,
ஏற்ற கருவி, தகுந்த காலம், மேற்கொள்ளும் செயலின் தன்மை , உரிய இடம் |
2 |
||||||
18 |
ü நாடுமுழுவதும் விடுதலைப்போராட்டத்தில்
மக்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்த காலத்தில், ஒத்துழையாமை
இயக்கத்தில் பங்கு கொள்ள காந்தியடிகள் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார். ü காந்தியடிகளின்
இத்தகைய வேண்டுகோள் காயிதேமில்லத்தின் மனதில் விடுதலை உணர்வை ஏற்படுத்தியது. ü கல்வியைவிட நாட்டு
விடுதலை மேலானது என்று எண்ணி ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டார். |
2 |
||||||
19 |
இரட்டையாக இணைந்து வந்து,
பிரித்தால் தனிப்பொருள் தராத
சொற்களை இரட்டைக்கிளவி என்பர். |
2
|
||||||
i i i) எவையேனும் மூன்று
வினாக்களுக்கு மட்டும் விடையளி 3X4=12 |
||||||||
20 |
v ஒரு சாணுக்கு ஒரு நாற்று வீதம் சுறுசுறுப்பாக நட்டனர். v நடவு நட்ட வயலின் மண்குளிருமாறு மடைவழியே நீர்பாய்ச்சினர். நட்ட
நெற்பயிர்கள் வரிசையாக வளர்ந்து செழித்தன. v பால் பிடித்து முற்றிய நெல்மணிகள் மனம் மயங்குமாறு விளைந்தன.
அறுவடை செய்யும் ஆட்களுக்குப் பணம் கொடுத்தனர். v அறுவடை செய்த நெலதாள்களைக் கட்டுகளாகக் கட்டித் தலைக்குச்
சும்மாடு வைத்துத் தூக்கிச் சென்று களத்தில் சேர்த்தனர். v கதிரடித்த நெலதாள்களைக் கிழக்கத்தி மாடுகளைக் கொண்டு மிதிக்கச்
செய்தனர். v மாடுகள் மிதித்த நெற்கதிர்களில் இருந்து நெல்மணிகள் மணிமணியாய்
உதிர்ந்தன. |
4 |
||||||
21 |
ü அகத்தியர் பொதிகை
மலையில் வாழ்ந்தார் என்பர் ü சங்கப்புலவர்களான
மாறோக்கத்து நப்பசலையார், பெரியாழ்வார், குமரகுருபரர், திரிகூடராசப்பக்
கவிராயர், அயோத்திதாசப்
பண்டிதர் ஆகியோர்
திருநெல்வேலியில் பிறந்து தமிழுக்குச் செழுமை செய்தனர். ü ஜி.யு.போப், கால்டுவெல், வீரமாமுனிவ
போன்றோரைத் தமிழின்பால் ஈர்த்த பெருமை திருநெல்வேலிக்கு உரியது. |
4 |
||||||
22
|
Ø இன்சொல்லை விளை
நிலமாகக் கொள்ள வேண்டும். Ø அதில் ஈகை என்னும்
பண்பை விதையாகக் கொண்டு விதைக்க வேண்டும். Ø வன்சொல் என்னும்
களையை நீக்க வேண்டும். Ø உண்மைபேசுதல் என்னும்
எருவினை இடுதல் வேண்டும். Ø அன்பாகிய நீரைப்
பாய்ச்ச வேண்டும். Ø அப்போது தான் அறமாகிய
கதிரைப் பயனாகப் பெற முடியும். Ø இளம்வயதில்
இச்செயல்களைச் செய்ய வேண்டும் என்று முனைப்பாடியார் கூறுகின்றார். |
4 |
||||||
23 |
v ஒருவர் செய்யும் செயலானது
அது தரும் பயனைவிட, செய்பவரின்
மனப்பாங்கு. உணர்வு ஆகியவற்றின் அடிப்படையிலேயே மதிப்பிடப்படுகிறது. தரத்தைக் காட்டுகிறது. v ஒருவருக்கொருவர் உதவி
செய்து கொள்ளுதல் மட்டும் போதாது, உதவி செய்தல் எதற்காக? தற்காப்புக்காகவும்
இலாபத்திற்காகவும் கூட உதவி செய்யலாமே! சொல்லப்போனால் இத்தகைய உதவிகள்
ஒருவகையில் வாணிகம் போலத்தான். v அதே உதவியைக்
கட்டுப்பாட்டு உணர்வுடன், உதவி பெறுபவரை
உறவுப்பாங்கில் எண்ணி, உரிமை உடையவராக
நினைந்து, உதவிசெய்தவதற்குப் பதில் அவரே எடுத்துக்
கொள்ளும் உரிமையை வழங்குதல் ஒப்புரவு ஆகும். |
4 |
||||||
24 |
|
4 |
||||||
IV) அடிமாறாமல் எழுதுக
4+2=6 |
||||||||
25 அ |
இன்சொல் விளைநிலனா
ஈதலே வித்தாக வன்சொல் களைகட்டு வாய்மை
எருவட்டி அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈனஓர் பைங்கூழ் சிறுகாலைச் செய் |
4 |
||||||
ஆ |
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்புஒவ்வா செய்தொழில் வேற்றுமை யான். |
2 |
||||||
V) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க
4X2=8 |
||||||||
26 |
அ. உள்ளங்கை நெல்லிக்கனி போல ஆ. பசுமரத்தாணி போல |
2 |
||||||
27 |
அ. POVERTY
ஆ. HARVEST |
2 |
||||||
28 |
அ. எத்தகைய (அ) எவ்வாறான ஆ. எத்தனை |
2 |
||||||
29 |
அ. ஆகையால்
ஆ. இல்லை என்றால் |
2 |
||||||
VI) ஏதேனும் ஒன்றுக்கு மட்டும்
விடையளிக்க
1X6=6 |
||||||||
30 |
முன்னுரை: சீனா
மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் வாழ்ந்து வந்த துறவிகள் ஜென் துறவிகள் அவர்களின்
சிந்தனைக் கதையே ஜென் கதைகள் அக்கதைகளும் ஒன்று உண்மை ஒளி.
குருவும் சீடர்களும் ஜென்
குருவிடம் சிலர் பாடகற்றுக் கொண்டு இருந்தனர். ஒரு நாள் உண்மை ஒளியது? என்பதைப் பற்றிப் பாடம் சொல்லிக் கொண்டு இருந்தா? பசி,
தாகம், தூக்கம் ஆகியவை அனைத்து
உயிர்களுக்ஒன்றே இரவு பகல் போல இன்பமும் துன்பமும் மாறி மாதி வரும் என்று குரு
சொல்லிக் கொடுத்தார். பிறகு சீடர்களிடம் "இருள் கலைந்து வெளிச்சம் வந்துவிட்டது"
என்று எப்படி அறிவீர்கள்? என்றான். உண்மை ஒளி: அதற்கு
சீடன் ஒருவன், "தொலைவில் தெரிவது குதிரையா? கழுதையா? என்பதைக் காணக்கூடிய அளவு வெளிச்சம் நான்
அறிவேன்" என்றான்.மற்றொருவன். "தொலைவில் தெரிவது ஆலமரமா? அரசமரமா? என்பதைக் காணக்கூடிய நேரத்தில் உண்மையாக
விடிந்ததை நான் அறிவேன்" என்றான் இவை எல்லாம் தவறு என்றார் குரு ஒரு
மனிதரைக் காணும் போது என் உடன் பிறந்தவர் என்று எப்போது உணர்கிறீர்களோ, அப்போது தான் உண்மையான ஒளி உங்களுக்குள் ஏற்படுகிறது என்பது பொருள்
என்றார் குரு. குருவை மாற்றிய
திருடன் ஒரு
நாள் குரு குதிரையில் அருகில் உள்ள சிற்றூருக்குப் புறப்பட்டுச் செல்கின்றாம்.
சாலையோரத்தில் ஒருவள் மயங்கிக் கிடந்தான் குரு அவனிடம் தண்ணீர் கொடுத்து நீ யார்?
என்று கேட்க, அவன் 'பக்கத்து
ஊர் செல்ல வேண்டும். பசியால் மயங்கி விழுந்துவிட்டேன் என்றான் குரு இரக்கம்
கொண்டு அவனை குதிரை மீது அமரச் செய்தான். குதிரையை அடித்து
அவள் வேகமாகச் சென்று விட்டான் அவன் திருடன் என்பதையும் தான் ஏமாற்றப்பட்டதையும்
அறிந்தார். திருடனுக்கு அறிவுரை! குதிரை
வாங்க குரு குதிரைச் சந்தைக்குச் சென்றார். அங்கு அந்தத் திருடன் குதிரையை
விற்றுக் கொண்டிருந்தார். குரு யாரிடமும் எதையும் சொல்லாதே! என்றான் அதற்கு
திருடன், இவர் ஏமாந்தது யாருக்காவது தெரிந்தால் அவமானம்
என்று நினைக்கின்றாரோ? என்று மனதில் நினைத்தான். அதற்கு
குரு, நான் ஏமாந்து போனது தெரிந்தால் உண்மையில் சாலையில்
மயக்கம் அடைந்து யார் கிடந்தாலும் அவருக்கு யாரும் உதவ மாட்டர்கள்
என்றார்.குருவின் பெருமையை நினைத்து தலைகுனிந்தான் திருடன். முடிவுரை ஒருவரை
ஏமாற்றுவது மற்றவர்களுக்குச் செய்யும் உதவியைக்கூட தடுக்கும் என்பதை இக்கதை
மூலம் அறியமுடிகின்றது. |
6 |
||||||
31 |
முன்னுரை: பிறருக்கு உதவி செய்து
மகிழ்ந்த ஒருவரின் கதைதான் 'பயணம்'. இக்கதையைப்
'பிரயாணம்' என்னும் நூலில் பாவண்ணன்
படைத்துள்ளார். மிதிவண்டி ஆசை 20 ஆண்டுகளுக்கு முன்
நடந்த நிகழ்ச்சி இது, அஞ்சலகத்தில் வேலை செய்து
கொண்டிருந்த ஒருவர் மிதிவண்டியின் மீது ஆசை வைத்துத் தனது மூன்றாவது மாதச்
சம்பளத்தில் மிதி வண்டி ஒன்றை வாங்குகின்றார். மிதிவண்டியில் செல்லுவது தான்
அவருக்குப் பொழுதுபோக்கு. தெரிந்த இடம் தெரியாத இடம் என எல்லாவற்றுக்கும்
மிதிவண்டிதான். கிருஷ்ணராஜ சாகர் அணை, மகாபலிபுரம் ஆகிய
இடங்களுக்கு எல்லாம் மிதிவண்டியிலே தான் பயணம். மிதிவண்டியில் பயனாம் ஹாசன் வழியாக மங்களூர்
செல்ல வேண்டும் என்பது அவரின் நீண்ட நாள் ஆசை.இரண்டு நாட்கள் மிதிவண்டி
பயணத்தில் ஹாசனை அடைந்தார். ஒரே நாளில் வெப்பம், மழை,
குளிர் மாறி மாறி வந்தது.மழைத் தூரலில் அடுத்த ஊர் வரை சென்றார்.
பெரிய இறக்கத்தில் இறங்கும் போது மிதிவண்டியில் காற்று இறங்கிவிட்டது.
காற்றடிக்கும் கருவியும் இல்லை.நீண்ட தூரம் நடந்தும் யாரையும் காணவில்லை. குடிசை வீட்டுச் சிறுவன் ஒரு குடிசை வீடு தெரிந்தது.
அதில் ஒரு சிறுவனும் அவனது அம்மாவும் இருந்தனர். பெங்களூரில் இருந்து
மிதிவண்டியில் வந்ததைச் சொன்னதும் அந்தச் சிறுவனால் நம்ப முடியவில்லை. மனம்
இருந்தால் எங்கு வேண்டும் என்றாலும் மிதிவண்டியில் செல்லாம் என்றார். மிதிவண்டி
ஆர்வத்தைச் சிறுவன் சொன்னான், அவனது மாமா வீட்டில்
மிதிவண்டி உள்ளது. அவர் இல்லாத போது குரங்கு பெடல் போட்டு ஓட்டுவேன் என்றான்.
காலைப்பொழுதுவிடிந்ததும் பக்கத்து ஊரில் உள்ள சந்திரேகௌடா என்பவர்மிதிவண்டியைச்
சரி செய்து தருகின்றார். சிறுவனுக்கு மிதிவண்டி ஓட்டக் கற்றுக்கொடுக்கிறார். பயணம் தொடர்கின்றது…… அம்மாவின்அனுமதி பெற்று,
அரிசிக்கெர என்ற இடத்தில் தன் மாமா வீட்டில் விடச்சொல்லி சிறுவன்
கேட்டான். சிறுவனுடன் பயணம் தொடர்ந்தது. அவரிடம் இருந்து மிதிவண்டியை வாங்கி
சிறிது தூரம் ஓட்டினான். மாமா வீடு நெருங்கும் சிறிது தூரத்திற்கு முன்னதில்
இருந்து மிதிவண்டியை மீண்டும் சிறுவன் ஓட்டக் கேட்டான். சிறுவனின் மிதிவண்டி
ஆர்வத்தைக் கண்டு ஓட்டக் கொடுத்தார். மிதிவண்டி சிறுவன் ஒட்டிக்கொண்டு இருக்கும்
போது, அவனிடம் சொல்லாமல் பேருந்தில் ஏறி செல்கின்றார் முடிவுரை ஆசைப்பட்டு வாங்கிய
மிதிவண்டியைத் தியாகம் செய்து, சிறுவனின் மனம் மகிழச் செய்த
அவரின் கருணை உள்ளம் பாராட்டுக்குரியது. "கருணை
உள்ளம் கடவுள் வாழும் இல்லம்" |
2 |
||||||
VII) ஒரு பக்க அளவில் விரிவாக எழுதுக
1X6=6 |
||||||||
32 அ |
உறவினருக்குக் கடிதம்
12 தென்றல் நகர், திருத்தணி-1 26-12-2023 அன்புள்ள
அத்தைக்கு, உங்கள் அன்பு அண்ணன் மகள்
எழுதும் கடிதம், நானும் என் அப்பா, அம்மா
ஆகியோரும் வ நலமாக இருக்கின்றோம். அதபோல தங்கள் நலத்தையும் மாமாவின் நலத்தையும்
அறிய) ஆவலாக இருக்கின்றேன். அடுத்த மாதம் முதல் வாரம் முதல் எங்கள் ஊரில்
மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற இருக்கின்றது.ஒரு வாரம் இத்திருவிழா
நடைபெறும், ஊரே அலங்காரமாக இருக்கும். பூச்சாட்டல்,
காப்புக்கட்டல், பூமிதித்தல், அலகு குத்தல், பொங்கல் வைத்தல் ஆகிய நிகழ்வுகள்
நடைபெறும். அத்தனை நிகழ்வுகளில் தாங்களும் மாமாவும் அவசியம் கலந்துகொள்ள எங்கள்
இல்லத்திற்கு வரவேண்டும். அப்பாவும் அம்மாவும் நேரில் வந்தும் அழைப்பார்கள்
அன்புடன் முடிக்கின்றேன்.உடன் பதில் எழுதுங்கள்.
இப்படிக்கு, அன்பு அண்ணன் மகள்
வா.நிறைமதி உறைமேல் முகவரி: ச.தமிழாசி. 12,திரு.வி.க நகர், மதுரை-2. |
6 |
||||||
ஆ |
என்னைக் கவர்ந்த நூல் சிலப்பதிகாரம் முன்னுரை: அன்னைத்
தமிழில் பல கோடி நூல்கள் இருப்பினும், என்னைக் கவர்ந்த
நூல் சிலப்பதிகாரமே ஆகும். அதனைப் பற்றி விரிவாகக் கார்போம். சிலப்பதிகாரம் அமைப்பு: சிலப்பதிகாரம்
புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக்
காண்டம் என மூன்று பெரும் பிரிவுகளையும், முப்பது
காதைகளாகிய சிறுபிரிவையும் கொண்டுள்ளது. இந்நூலை இளங்கோவடிகள் இயற்றியுள்ளார். சிலப்பதிகாரக் கதை! புகார்
நகரத்தில் கோவலனும், கண்ணகியும் திருமணம் செய்து
வாழ்கின்றனர். கண்ணகியைப் பிரிந்து கோவலன் அதவியுடன் வாழ்கின்றார்.
அவளைப்பிரிந்து மீனர்டும் கண்ணகியுடன் மதுரை செல்கின்றார். கண்ணகியின் சிலம்பை
விற்கச் சென்ற இடத்தில் கொல்லப்படுகின்றான்.கண்ணகி நீதியை நிலைநாட்டி மதுரையை
எரித்து, வானுலகம் செல்கின்றாள். சிறப்புகள்: ஐம்பெருங்காப்பியங்களுள்
ஒன்று சிலப்பதிகாரம். முத்தமிழ்க் காப்பியம், உரையிடையிட்ட பாட்டுடைச்
செய்யுள், நாடகக் காப்பியம், குடிமக்கள்
காப்பியம் என்றெல்லாம் சிறப்பிக்கப்படும் நூல், ன்
குடிமக்களைக் கதை மாந்தராகக் கொண்டு எழுதப்பட்ட முதல் நூல் இது. சுவர்ந்த காரணம்: மூவேந்தர்களைப்
பற்றியும், முத்தமிழ் பற்றியும், முச்சுவை
பற்றியும், முந்நீதிகளைப் பற்றியும் ஒரே நூலில்
விளக்குவதால் சிலப்பதிகாரம் என்னை மிகவும் கவர்ந்தது. பொதுமக்களைத் தலைவராகக்
கொண்டு பாடப்பட்டதாலும் என்னைக் கவர்ந்தது இந்நூல், முடிவுரை: சிலப்பதிகாரம்
மிகவும் இனிமையான நூல் என்பதை அறிந்து, நான் படித்தேன்,
என்னைக் கவர்ந்தது. நீங்களும் படியுங்கள்! உங்களையும் கவரும்! |
6 |
||||||