10 TH STD TAMIL QUESTION AND ANSWERS IYAL-6

10.ஆம் வகுப்பு - தமிழ்

வினாவிடைகள் இயல்-6


ஒருமதிப்பெண் வினா விடைகள் ( வினா எண் 1 முதல் 15)

1. குளிர் காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள்

அ) முல்லை, குறிஞ்சி, மருத நிலங்கள்    ஆ) குறிஞ்சி, பாலை, நெய்தல் நிலங்கள்

இ) குறிஞ்சி, மருதம் நெய்தல் நிலங்கள்   ஈ) மருதம், நெய்தல், பாலை நிலங்கள்

2. கூற்று 1 போராட்டப் பண்புடனே வளர்ந்தவர் கலைஞர்.

   கூற்று 2:அவருக்குள் இருந்த கலைத்தன்மை வளர அது உதவியது.                                 

அ) கூற்று 1 சரி 2 தவறு   ஆ) கூற்று 1 மற்றும் 2 தவறு   இ) கூற்று 1 தவறு 2 சரி    ஈ) கூற்று 1 மற்றும் 2 சரி

3. மலர்கள் தரையில் நழுவும் - எப்போது?

அ) அள்ளி முகர்ந்தால்  ஆ) தளரப் பிணைத்தால்   இ) இறுக்கி முடிச்சிட்டால்  ஈ) காம்பு முறிந்தால்

4. தூக்குமேடை என்னும் நாடகத்தின் பாராட்டு விழாவில்தான், கலைஞர் என்ற சிறப்புப்பெயர் வழங்கப்பட்டது -இத்தொடருக்கான வினா எது?

அ) தூக்குமேடை நாடகத்தில் நடித்தவர் யார்ஆ) கலைஞர் என்ற சிறப்புப்பெயர் எப்போது வழங்கப்பட்டது?

இ) தூக்குமேடை என்பது திரைப்படமா? நாடகமாஈ) யாருக்குப் பாராட்டுவிழா நடத்தப்பட்டது?

5. கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?

அ) நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால் ஆ) ஊரில் விளைச்சல் இல்லாததால்

இ) அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்    ஈ) அங்கு வறுமை இல்லாததால்

6) முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழை இயற்றியவர்---------

அ) குமரகுருபரர்  ஆ) முத்துக்குமாரசாமி  இ) ஒட்டக்கூத்தர்  ஈ) தமிழழகனார்

7)பிள்ளைத்தமிழ்-------- வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று

அ)108  ஆ)96  இ)133  ஈ)81                

8) கொடிவேலி உடைய கமுகந்தோட்டங்கள்,நெல்வயல்களில் பரவி பாய்வது

அ) காவேரி ஆறு  ஆ) சரயு ஆறு  இ) பாலாறு   ஈ) வைகை ஆறு

9)கம்பர் இராமனது வரலாற்றைத் தமிழில் வழங்கி……….எனப் பெயரிட்டார்

அ) பெரியபுராணம்  ஆ)இராமாவதாரம்  இ) இராமாயணம்  ஈ)இராம காதை 

10)கம்பராமாயணம்--------- காண்டங்களை உடையது

அ)நான்கு   ஆ)ஏழு   இ)எட்டு   ஈ)ஆறு

11)கம்பரை ஆதரித்தவர்

அ) சீதக்காதி  ஆ)குமண வள்ளல்  இ) சடையப்ப வள்ளல்  ஈ) பாண்டித்துரை 

12. சங்க இலக்கியங்கள், ஐந்திணைகளுக்குமான ஒழுக்கங்களை இரு திணைகளும் எடுத்தியம்புகின்றன. இத்தொடரில் அமைந்துள்ள தொகைச் சொற்களின் பொருத்தமான விரியைக்கண்டறிக.

அ) குறிஞ்சி, முல்லை, நெய்தல், பாலை - நல்வினை, தீவினை

ஆ) குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை - உயர்திணை, அஃறிணை

இ) குறிஞ்சி, முல்லை, நெய்தல், பாலை, மருதம் - அறம்,பொருள், இன்பம்

ஈ) குறிஞ்சி,முல்லை,மலை,காடு, வயல்- பனை, திணை

"வண்மை யில்லையோர் வறுமை யின்மையாற்

றிண்மை யில்லையோர் செறுந ரின்மையால்

உண்மை யில்லைபொய் யுரையி லாமையால்

வெண்மை யில்லைபல் கேள்வி மேவலால்"

1. பாடலின் ஆசிரியர்

அ) வீரமாமுனிவர்  ஆ) தமிழழகனார்  இ) கம்பர்  ஈ) இளங்கோவடிகள்

2. --------மிகுந்திருப்பதால் கோசல நாட்டில் அறியாமை இல்லை

அ) வறுமை  ஆ) கொடை இ) பொய்மொழி   . கேள்வி

3. எதுகையைத் தேர்ந்தெடுக்க.

அ) உண்மை, வெண்மை  ) உண்மை, பொய்யுரை  ) வண்மை, வறுமை ஈ) வெண்மை, கேள்வி

4. வண்மை - பொருளைத் தேர்க.

அ) கொடை ஆ) மெய்மை இ) அறியாமை ஈ) வறுமை

இரண்டு மதிப்பெண் வினா விடைகள் ( வினா எண்: 16 முதல் 28)   

1.காட்டில் விளைந்த வரகில் சமைத்த உணவு மழைக்கால மாலையில் சூடாக உண்ணச் சுவை மிகுந்திருக்கும். இத்தொடரில் அமைந்துள்ள முதற்பொருள், கருப்பொருள்களை வகைப்படுத்தி எழுதுக.

விடை: முதற்பொருள்

                நிலம்-முல்லை  , பொழுது-மழைக்காலம்(பெரும்பொழுது) மாலை(சிறுபொழுது)

            கருப்பொருள்:

                 வரகு(உணவு)

2.” கலைஞர் , பழுமரக்கனிப் பயன் கொள்ளும் பேச்சாளர். படித்தவரைக் கவரும் ஆற்றல் கொண்ட எழுத்தாளர்" - பேராசிரியர் அன்பழகனார். இக்கூற்றை அயற்கூற்றாக எழுதுக.

விடை:

    கலைஞரைப் பேராசிரியர் அன்பழகனார், பழுமரக்கனிப் பயன்கொள்ளும் பேச்சாளர் என்றும் படித்தவரைக்  கவரும் ஆற்றல் கொண்ட எழுத்தாளர் என்றும் பாராட்டியுள்ளார்

3. உறங்குகின்ற கும்பகன்ன ’எழுந்திராய் எழுந்திராய்’

காலதூதர் கையிலே ’உறங்குவாய் உறங்குவாய்’

கும்பகன்னனை என்ன சொல்லி எழுப்புகிறார்கள்? எங்கு அவனை உறங்கச்  சொல்கிறார்கள்?

விடை:

ü  பொய்யான வாழ்வு முடியப்போகிறது.

ü  காலனின் தூதர் கையில் உறங்குவாய் என்கிறார்கள்

4. சாந்தமானதொரு பிரபஞ்சத்தைச்

சுமக்கின்றன ஒல்லித் தண்டுகள் – இக்கவிதை அடிகள் உணர்த்தும் உள்ள ழகை எழுதுக.

விடை:

ü  பூ தொடுப்பவரின் எண்ணங்களை விளக்குகிறது.

ü  மலரை உலகமாக உருவகம் செய்துள்ளனர்.

ü  உலகத்தைக் கவனமாக கையாள வேண்டும் என்று பாடலில் கூறப்பட்டுள்ளது

5. கீழ்வரும் தொடர்களில் பொருந்தாத கருப் பொருளைத் திருத்தி எழுதுக.

உழவர்கள் மலையில் உழுதனர்.

முல்லைப் பூச்செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர். 

விடை:  # உழவர் வயலில் உழுதனர்.

             # நெய்தல் பூச்செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.

6. 'கரப்பிடும்பை இல்லார்' - இத்தொடரின் பொருள் கூறுக.

விடை:  'பொருளை மறைத்து வைத்தல் என்னும் துன்பத்தைச் செய்யாதவர்' என்பது பொருள்.

7. தஞ்சம் எளியர் பகைக்கு - இவ்வடிக்குரிய அசைகளையும் வாய்பாடுகளையும் எழுதுக.

விடை:

தஞ் / சம் -   நேர் நேர் - தேமா

எளி / யன் - நிரை நேர் - புளிமா

பகைக் / கு - நிரைபு - பிறப்பு.

8. வறுமையின் காரணமாக உதவி கேட்டு வருபவரின் தன்மானத்தை எள்ளி நகையாடுவது குறித்துக் குறளின் கருத்து என்ன?

விடை:

   ஏளனம் செய்யாமல், கொடுப்பவரைக் கண்டால், (இரப்பவரின்) பிச்சை எடுப்பவரின் உள்ளம் மகிழும்.

9. பின்வருவனவற்றுள் கூரான ஆயுதம் எது என்று செந்நாப்போதார் கூறுகிறார்? ஏன் என்பதை எழுதுக.

      பெரிய கத்தி, இரும்பு ஈட்டி, உழைத்ததால் கிடைத்த ஊதியம், வில்லும் அம்பும்

விடை:

ü  உழைத்ததால் கிடைத்த ஊதியமே  கூரான ஆயுதம்

ü  அதுவே பகைவரின் ஆணவத்தை அழிக்கவல்லது

10. . தொடர்களை அடைப்புக்குறிக்குள் குறிப்பிட்டுள்ளவாறு மாற்றுக.

1.அழைப்பு மணி ஒலித்தது. கயல்விழி கதவைத் திறந்தார். ( கலவைச் சொற்றொடராக மாற்றுக )

   விடை: அழைப்பு மணி ஒலித்ததால் கயல்விழி கதவைத் திறந்தார்

2. இன்னாசிரியார், புத்தகங்களை வரிசைப்படுத்தினார். அவற்றைப் புத்தக அடுக்கங்களில் அடுக்கி வைத்தார்; புத்தகங்களைக் கேட்டவர்களுக்கு எடுத்துக்கொடுத்தார். (தொடர்சொற்றொடராக மாற்றுக)

விடை : இன்னாசிரியார், புத்தகங்களை வரிசைப்படுத்தி, புத்தக அடுக்கங்களில் அடுக்கிவைத்து, புத்தகங்களைக் கேட்டவர்களுக்கு எடுத்துக்கொடுத்தார்.

3. கலைஞர் எழுத்தைத் தமது ஆயுதமாகக் கொண்டு வாழ்ந்தார். கலைஞர், எழுத்துவழியாகத் தமது எண்ணங்களைக் கடைக்கோடித் தமிழனுக்கும் கொண்டு சென்றார். (கலவைச் சொற்றொடராக மாற்றுக)

விடை : எழுத்தை ஆயுதமாகக் கொண்டு வாழ்ந்த கலைஞர், தமது எண்ணங்களை எழுத்து வழியாகக் கடைக்கோடித் தமிழனுக்கும் கொண்டு சென்றார்.

3. முரசொலி ஏட்டைக் கையெழுத்து இதழாகத் தொடங்கி வார இதழாக்கி, நாளேடாக்கினார் கலைஞர்.   (தனிச்சொற்றொடர்களாக மாற்றுக)

விடை: கலைஞர் முரசொலி ஏட்டைக் கையெழுத்து இதழாகத் தொடங்கினார். கலைஞர் முரசொலி ஏட்டை வார இதழாக்கினார்.  கலைஞர் முரசொலி ஏட்டை நாளேடாக்கினார்

4. ஓடிக்கொண்டிருந்த மின்விசிறி சட்டென நின்றவுடன், அறையில் உள்ளவர்கள் பேச்சு தடைப்பட்டது. (தனிச்சொற்றொடர்களாக மாற்றுக)

விடை : ஒடிக்கொண்டிருந்த மின்விசிறி சட்டென நின்றது அறையில் உள்ளவர்கள் பேச்சுத் தடைப்பட்டது.

7.தொடரில் விடுபட்ட வண்ணங்களை உங்களின் எண்ணங்களால் நிரப்புக:-

1. வானம் கருக்கத் தொடங்கியது. மழை வரும் போலிருக்கிறது.

2. அனைவரின் பாராட்டுகளால்,வெட்கத்தில் பாடகர் முகம் சிவந்தது

3. வெள்ளந்தி மனம் உள்ளவரை அப்பாவி என்கிறோம்.

4.கண்ணுக்குக் குளுமையாக இருக்கும் பசும்புல்வெளிகளில் கதிரவனின் மஞ்சள்  வெயில் பரவிக்கிடக்கிறது.

5. வெயில் அலையாதே;உடல் கறுத்து விடும்.

8. பொருத்தமானவற்றைச் சொற்பெட்டியில் கண்டு எழுதுக.

தங்கும், மரம் வீடு, அவிழும், தயங்கும்,மரவீடு, தோற்பாவை, விருது, தோற்பவை,கவிழும்,விருந்து

1. விரட்டாதீர்கள்பறவைக்கு மரம் வீடு

  வெட்டாதீர்கள்மனிதருக்கு அவை தரும் மரவீடு

2. காலை ஒளியினில் மலரிதழ் அவிழும்

  சோலைப் பூவினில் வண்டினம் கவிழும்

3. மலைமுகட்டில் மேகம் தங்கும் அதைப்

  பார்க்கும் மனங்கள் செல்லத் தயங்கும்

4. வாழ்க்கையில் தோற்பவை  மீண்டும் வெல்லும்இதைத்

  தத்துவமாய்த் தோற்பாவை கூத்து சொல்லும்.

5. தெருக் கூத்தில் நடிகருக்குக் கைதட்டலே விருது அதில்

9. பிறமொழிச்சொற்களைத் தமிழ்ச் சொற்களாக மாற்றுக:-

பிறமொழிச் சொல்

தமிழ்ச்சொல்

பிறமொழிச் சொல்

தமிழ்ச்சொல்

கோல்ட் பிஸ்கட்

தங்கக்கட்டி

வெயிட்

எடை

யூஸ்

பயன்படுத்தி

எக்ஸ்பெரிமெண்ட் ரிப்பீட்

சோதனை மீண்டும்

ஆல் தி பெஸ்ட்

வாழ்த்துகள்

ஈக்வலாக

சரிசமமாக

பட்

ஆனால்

ஆன்சரை

விடையை

10. மனிதனுக்கும் மலருக்குமான மணம் வீசும் இந்த நயவுரையைத் தொடர்க.

விடை

  வண்டுகளை ஈர்க்கும் வாசனையில்

  பூக்களிடம் வசப்படுவது மனிதர்களே!

  பூச்சியைக் கவரும் வண்ணங்களில்

  பூக்களிடம் விழுவது மனிதர்களே!

  பூவையர் நெஞ்சைக் கவர்வதனால்

  பூவெனப் பெயரை வைத்தாரோ?                                                          

11. அகராதியில் காண்க

1.     தால்நாக்கு

2.    உழுவௌபுலி

3.    ஏந்தெழில்  - மிகுந்த அழகு

4.    அகவுதல்அழைத்தல்

5.    அணிமை அருகில்

12. கலைச்சொல் தருக

1.     PLAY WRIGHT – நாடக ஆசிரியர்

2.    SCREENPLAY – திரைக்கதை

3.    STORYTELLER – கதை சொல்பவர்

4.    AESTHETICS – அழகியல்

13. மலைமேல் பாதுகாப்பாக நின்றுகொண்டு யானைப்போரைக் காணும் உவமையைக் கொண்ட திருக்குறளை எழுதுக.

விடை:

  "குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்

   றுண்டாகச் செய்வான் வினை"

14.குற்றம் இல்லாமல் தன் குடிப்பெருமையை உயரச்செய்து வாழ்பவரை உலகத்தார் உறவாகப் போற்றுவர் என்னும் பொருளைக் கொண்ட திருக்குறளை எழுதுக.

விடை:

   ''குற்றம்  இலனாய்க்  குடிசெய்து  வாழ்வானைச்

    சுற்றமாச் சுற்றும்  உலகு"

மூன்று மதிப்பெண் வினா விடைகள் (வினா எண்: 29 முதல் 37)

1. வைத்தியநாதபுரி முருகன் குழந்தை யாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங் கீரை ஆடியநயத்தை விளக்குக.

விடை:

ü  காலில் அணிந்த கிண்கிணிகளோடு சிலம்புகள் ஆடட்டும்.

ü  அரைஞாண் மணியோடு அரைவடங்கள் ஆடட்டும்.

ü  தொந்தியுடன் சிறுவயிறும் ஆடட்டும்.

ü  நெற்றிச்சுட்டி,குண்டலங்கள் ஆக்யவையும் ஆடட்டும்.

ü  முருகப்பெருமானே செங்கீரை ஆடுக.

2. நவீன கவிதையில் வெளிப்படும்  நுண்மை உள்ளம் பூத்தொடுக்கும் நாட்டுப்புறப்பாடலில் வெளிப்படுமாறு ஒப்பிட்டு எழுதுக

விடை:

நவீன கவிதை

நாட்டுப்புறப்பாடல்

1.காம்புகளை இறுக்கி முடித்தால் துண்டிக்கப்படும்; தளரப்பிணைத்தால் நழுவும்.

அம்மனுக்கு மலர்களை விரலால் எடுத்தால் காம்பழுகிப்போய்விடும் என்று எண்ணுகின்றனர்.

2.வாழ்நாள் முடிவை அறிந்தும் சிரிக்கும் மலர்களைப்போலபெண்களும் குடும்பத்தைக் காக்கிறார்கள்

கையால் எடுக்காமல் தங்கத்துரட்டியால் எடுக்கின்றனர்.

3. கடற்கரை யில் உப்புக் காய்ச்சுதல் நடைபெறுகிறது; மலைப்பகுதிகளில் மலைப் பயிர்களும் நிலப் பகுதிகளில் உழவுத்தொழிலும் நடைபெறுகின்றன.’ - காலப் போக்கில் பல மாற்றங்கள் நிகழ்ந்தபோதிலும்,பண்டைத் தமிழரின் திணைநிலைத்தொழில்கள் இன்றளவும்  தொடர்வதையும் அவற்றின் இன்றை ய வளர்ச்சியை யும் எழுதுக.

விடை:

ü  சங்ககாலத் தமிழர் திணையின் அடிப்படையில் நிலத்தைப்பிரித்தனர்

ü  ஐவகை நிலங்களுக்கேற்ப தனித்தனியே தொழில்களை மேற்கொண்டு வாழ்ந்தனர்.

ü  இன்றைய சூழலில் திணைநிலைத் தொழில்கள் நவீனமாக்கப்பட்டுள்ளதே தவிர மாறவில்லை.

4.தமிழ்மொழிக்காகக் கலைஞர் செய்த சிறப்புகளுள்  நீங்கள் அறிந்துகொண்ட இரண்டினை எழுதுக

விடை:

ü  தமிழுக்காகத் தமிழ்வளர்ச்சித் துறையை உருவாக்கினார்

ü  மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலைப் பரவலாக்கினார்

ü  2010 ல் கோவையில் உலகத் தமிழ் மாநாடு நடத்தினார்

5. சிறந்த அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்துவதைத் திருக்குறள்வழி விளக்குக.

விடை:

ü  தொழில் செய்வதற்குத் தேவையான கருவி, அதற்கு ஏற்ற காலம், செயலின் தன்மை, செய்யும் முறைஆகியவற்றைஅறிந்து அரிய செயலைச் செய்பவரே அமைச்சர் ஆவார்.

ü  மனவலிமை, குடிகளைக்காத்தல், ஆட்சி முறைகளைக்கற்றல் , நூல்களைக்கற்றல், விடாமுயற்சி ஆகிய ஐந்தும் சிறப்பாக அமைந்தவரேஅமைச்சராவார்.

6. பலரிடம் உதவி பெற்றுக் கடின உழைப்பால் முன்னேறிய ஒருவர், அவருக்கு உதவிய நல்ல உள்ளங்களையும் சுற்றங்களையும் அருகில் சேர்க்கவில்லை. அவருக்கு உணர்த்தும் நோக்கில் வள்ளுவர் குறிப்பிடும் கருத்துகள் யாவை?

விடை:

v  கடின உழைப்பால் முன்னேறிய ஒருவர், தன் சுற்றத்தாரிடம் அன்பு இல்லாமலும், அறிவுடையோர் துணை இல்லாமலும் இருந்தால், பகைவரின் வலிமையை எதிர்கொள்ள முடியாது."

v  பிறருக்குக் கொடுத்து உதவாதவராய் இருந்தால் எளிதில் பகைக்கு ஆட்பட நேரிடும்.

v  பிறருக்குக் கொடுத்து உதவாதவர் பெற்ற செல்வம், பயனற்றுப் போகும்.

v  வாழ்வில் வெற்றி பெறச் சுற்றத்தையும் துணையையும் போற்றி வாழவேண்டும் என, வள்ளுவர் வலியுறுத்துகிறார்.

ஐந்து மதிப்பெண் வினா விடைகள் ( வினா எண் 38 முதல் 42)

1. நெகிழிப்பைகளின் தீமையைக் கூறும் பொம்மலாட்டம் உங்கள் பள்ளியின் ஆண்டு விழாவில் நிகழ்த்தப்படுகிறது. அதற்குப் பாராட்டுரை ஒன்றினை எழுதுக. (வினா எண்: 38)

விடை:

ü  நெகிழிப்பைகளின் தீமையைக் கூறும் வகையில் பொம்மலாட்டம் இருந்தது.

ü  மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் எளிமையாக விளக்கப்பட்டன.

ü  சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் எளிமையாக விளக்கப்பட்டன.

ü  மாணவர்களின் சமூக அக்கறையை வளர்க்கும் விதமாக இருந்தது

ü  அனைத்து கலைஞர்களுக்கும் பாராட்டுகள்

2. சந்தக் கவிதையில் சிறக்கும் கம்பன் என்ற தலைப்பில் இலக்கிய உரை எழுதுக. (வினா எண்: 38)

   அன்பும் பண்பும் குணச்சித்திரமும் கொண்ட தலைவர் அவர்களே! தேர்ந்தெடுத்த பூக்களைப் போன்று வரிசை தொடுத்து அமர்ந்திருக்கும் ஆன்றோர்களே! அறிஞர் பெருமக்களே! வணக்கம், இயற்கை கொலு வீற்றிருக்கும் காட்சியைப் பெரிய கலைநிகழ்வே நடப்பதான தோற்றமாகக் கம்பன் காட்டும் கவி..... தண்டலை மயில்கள் ஆட.......  இவ்வுரையைத் தொடர்க.

விடை:

ü  கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்ற பழமொழிக்கு மிகவும் தகுதி வாய்ந்தவர் கம்பர்.

ü  சந்தத்திற்கு ஏற்ற சொற்களைத் தேவையான இடத்தில் பயன்படுத்தியுள்ளார்.

ü  பாலகாண்டத்தில் அயோத்தி நகரத்தை வர்ணிக்கும்போதும், நடை அழகை வர்ணிக்கும் போதும் அவர் பயன்படுத்தியுள்ள சொற்கள் அக்காட்சிகளை நம் கண்முன் காண வைக்கிறது.

ü  இதன்மூலம் கம்பர் கலை மேடையை நமக்குச் சந்தத்தில் செய்யுளில் வடித்துக் காட்டியுள்ளதை அறியலாம்

3) காட்சியைக்கண்டு கவினுற எழுதுக.   (வினா எண்: 40)

சிந்திக்கத் தூண்டும் காட்சி!

சிந்தையில் நின்ற காட்சி!

எதிர்காலத்தேவை இக்காட்சி!

உண்மையை உணர்த்தும் காட்சி!

மனதில் வைத்தால் நமக்கு

நன்மையை அளிக்கும் காட்சி!

என் கவிதைக்கு இரையான காட்சி!



4) மனிதனுக்கும் மலருக்குமான மணம் வீசும் இந்த நயவுரையைத் தொடர்க;-  (வினா எண்: 40)

            வண்டுகளை ஈர்க்கும் வாசனையில்

            பூக்களிடம் வசப்படுவது மனிதர்களே!

            பூச்சியைக் கவரும் வண்ணங்களில்

            பூக்களிடம் விழுவது மனிதர்களே!

            தென்றலின் வருடலில்

            பூக்களிடம் விழுவது மனிதர்களே

            இறகை விட மென்மைக் கொண்ட

            பூக்களில் மயங்குவது மனிதர்களே.

4) மொழி பெயர்க்க:-    (வினா எண்: 42)

    Kalaignar Karunanidhi is known for his contributions to Tamil literature. His contributions cover a wide range: poems, letters, screenplays, novels, biographies, historical novels, stage-plays, dialogues and movie songs. He has written Kuraloviam for Thirukural, Tholkaappiya Poonga, Poombukar, as well as many poems, essays and books. Apart from literature, Karunanidhi has also contributed to the Tamil language through art and architecture. Like the Kuraloviyam, in which Kalaignar wrote about Thirukkural, through the construction of Valluvar Kottam he gave an architectural presence to Thiruvalluvar, in Chennai. At Kanyakumari, Karunanidhi constructed a 133-foot-high statue of  Thiruvalluvar in honour of the scholar.

தமிழாக்கம்:

   தமிழ் இலக்கியத்திற்கு தான் செய்த படைப்புகளால் கலைஞர் கருணாநிதி அறியப்படுகிறார். அவரது படைப்புகளில், கவிதைகள், கடிதங்கள், திரைக்கதைகள், புதினங்கள், வாழ்க்கை வரலாறுகள், சரித்திரப் புதினங்கள், மேடை நாடகங்கள், திரைக்கதை வசனங்கள் மற்றும் திரைப்படப்பாடல்களும் அடக்கம். திருக்குறளுக்கு குறளோவியம், தொல்காப்பியப் பூங்கா, பூம்புகார், கவிதைகள், கட்டுரைகள் மற்றும் பல நூல்களையும் எழுதியுள்ளார். இலக்கியத்துக்கு அப்பாற்பட்டு, கலை, கட்டிடக்கலை வாயிலாகவும் கருணாநிதி அவர்கள் தனது பங்களிப்பைச் செய்துள்ளார். திருக்குறளுக்கு, "குறளோவியம்" எழுதியதைப் போல, சென்னையில், வள்ளுவர் கோட்டத்தில், ஒரு கட்டிடத்தின் வாயிலாக, திருவள்ளுவருக்கு ஒரு மணிமாடத்தைத் தந்துள்ளார். அந்த அறிஞருக்குப் பெருமை சேர்க்க, கன்னியாகுமரியில், 133 அடி திருவள்ளுவர் சிலையை கருணாநிதி எழுப்பியுள்ளார்.

6) நிற்க அதற்குத் தக  (வினா எண்: 42)

நாட்டுப்புற கலைகளைப் பாதுகாக்கவும்,வளர்க்கவும் மேன்மேலும் பரவலாக்கவும் நீங்கள் செய்ய விருப்பனவற்றை வரிசைப்படுத்துக.

1.பிறந்தநாள் விழாவில் மயிலாட்டம் நிகழ்த்துதல்

2. எங்கள் குடும்ப விழாக்களில் பொம்மலாட்டம் நிகழ்த்துதல்

3. கோவில் திருவிழாக்களில் கரகாட்டம், காவடியாட்டம் நிகழ்த்துதல்

4. விடுமுறை காலத்தில் தெருக்கூத்து நிகழ்த்துதல்.

5. விளையாட்டு விழாக்களில் புலியாட்டம் நிகழ்த்துதல்.

எட்டு மதிப்பெண் வினா விடைகள் ( வினா எண்: 43 முதல் 45)

1) போராட்டக் கலைஞர் – பேச்சுக் கலைஞர் – நாடகக் கலைஞர் – திரைக்கலைஞர் – இயற்றமிழ்க் கலைஞர் ஆகிய தலைப்புகளைக் கொண்டு கட்டுரை வரைக.   (வினா எண்: 43)

விடை:

குறிப்புச்சட்டகம்

முன்னுரை

போராட்டக் கலைஞர்

பேச்சுக் கலைஞர்

நாடகக் கலைஞர்

திரைக்கலைஞர்

இயற்றமிழ்க் கலைஞர்

முடிவுரை

முன்னுரை:

   பன்முகக் கலைஞர் மு. கருணாநிதி அவர்களைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

போராட்டக் கலைஞர்:

     தனது 14.ஆம் வயதில் இந்திஎதிர்ப்புக்காக மாணவர்களை ஒன்று திரட்டி, போராட்டம் நடத்தினார்.

பேச்சுக் கலைஞர்:

     பல தமிழறிஞர்களின் பேச்சைக் கேட்டு, தனது பேச்சாற்றலை வளர்த்துக் கொண்டார். சிறுவர்களுக்கு பேச்சுப்பயிற்சி வழங்க சிறுவர் சீர்திருத்தச் சங்கத்தை உருவாக்கினார்.

நாடகக் கலைஞர்:

   கலைஞர் சீர்திருத்த நாடகங்களை இயற்றினார். தூக்குமேடை எனும் புகழ்பெற்ற நாடகத்தை இயற்றினார். இந்நாடகத்தின் பாராட்டு விழாவில் “ கலைஞர் ” என்ற பட்டம் வழ்ங்கப்பட்டது.

திரைக்கலைஞர்:

   எம்.ஜி.ஆரின் இராஜகுமாரி படத்துக்காக வசனம் எழுதியுள்ளார். புரட்சிகரமான வசனங்களை எழுதி புகழ்பெற்று விளங்கினார்.

இயற்றமிழ்க் கலைஞர்:

     கலைஞர் பல சிறுகதைகள், புதினங்கள் மூலம் தன்னுடைய இலக்கிய ஆளுமையை வெளிப்படுத்தினார்.

முடிவுரை:

   தமிழின் மெருமிதங்களையும், விழுமியங்களையும் மீட்டெடுத்தவர் கலைஞர் கருணாநிதி.

 2) உங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.

(வினா எண்: 45)

 

குறிப்புச்சட்டகம்

முன்னுரை

பொருட்காட்சி

நுழைவுச் சீட்டு

பல்துறை அரங்கம்

அங்காடிகள்

பொழுதுபோக்கு

முடிவுரை

முன்னுரை :

    எங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப்பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வை இக்கட்டுரையில் காண்போம்.

பொருட்காட்சி :

      மக்கள் அதிகமாக கூடும் இடத்தில் பொருட்காட்சி நடைபெற்றது.

நுழைவுச் சீட்டு:

      பொருட்காட்சி நடைபெறும் இடத்தின் உள்ளே செல்ல நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டது. பெரியவர்களுக்கு 30 ரூபாயும்,சிறுவர்களுக்கு 15 ரூபாயும் என நுழைவுச்சீட்டு நிர்ணயம் செய்யப்பட்டது.

பல்துறை அரங்கம் :

            அரசின் சாதனைகள் கூறும் பல்வேறு அரசுத்துறை அரங்கங்களும்,தனியார் பொழுது போக்கு நிறுவனங்களும் நிறைய இருந்தன.

அங்காடிகள்:

            வீட்டு உபயோகப் பொருட்கள்,விளையாட்டுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் என பல்வேறு பொருட்களும் ஒரே இடத்தில் கிடைத்தன.

பொழுதுபோக்கு :

            சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் விளையாட பொம்மை அரங்கம் போன்ற பல்வேறு அரங்கங்களும்,இராட்டின்ங்களும் நிறைய இருந்தன.

முடிவுரை:

            எங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வினை இக்கட்டுரையில் கண்டோம்.


PDF வடிவில் பதிவிறக்க 15 வினாடிகள் காத்திருக்கவும்.. 

You have to wait 10 seconds.

Download Timer

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை