கபிலரின் குறிஞ்சிப்பாட்டு கூறும் 99 தமிழ் மலர்கள்
தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,
செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,
உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம், . . . .[65]
எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்
வடவனம், வாகை, வான் பூங் குடசம்,
எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,
பயினி, வானி, பல்லிணர்க் குரவம்,
பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, . . . .[70]
விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,
குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி,
குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,
போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,
செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம், . . . .[75]
கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத்
தில்லை, பாலை, கல்இவர் முல்லை,
குல்லை, பிடவம், சிறுமாரோடம்,
வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்
தாழை, தளவம், முள் தாள் தாமரை . . . .[80]
ஞாழல், மௌவல், நறுந்தண் கொகுடி,
சேடல், செம்மல், சிறுசெங்குரலி
கோடல், கைதை, கொங்கு முதிர் நறுவழை,
காஞ்சி, மணிக்குலைக் கள் கமழ் நெய்தல்,
பாங்கர், மராஅம், பல்பூந் தணக்கம், . . . .[85]
ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை,
அடும்பு, அமர் ஆத்தி, நெடுங்கொடி அவரை,
பகன்றை, பலாசம், பல்பூம் பிண்டி,
வஞ்சி, பித்திகம், சிந்து வாரம்,
தும்பை, துழாஅய் சுடர்ப்பூந் தோன்றி, . . . .[90]
நந்தி, நறவம், நறும் புன்னாகம்,
பாரம், பீரம், பைங்குருக்கத்தி,
ஆரம், காழ்வை, கடிஇரும் புன்னை,
நரந்தம், நாகம், நள்ளிருள்நாறி,
மாஇருங் குருந்தும், வேங்கையும் பிறவும் . . . .[95]
அரக்கு விரிந்தன்ன பரு ஏர் அம் புழகுடன்
மால் அங்கு உடைய மலிவனம் மறுகி
வான்கண் கழீஇய அகல் அறைக் குவைஇ .
1.
காந்தள்
2.
ஆம்பல்
3.
அனிச்சம்
4.
குவளை
5.
குறிஞ்சி
6.
வெட்சி
7.
செங்கொடுவேரி
8.
தேமா (தேமாம்பூ)
9.
மணிச்சிகை (குன்றிமணி )
10. உந்தூழ் (பெரு மூங்கில்)
11. கூவிளம் (வில்வம்)
12. எறுழ் ( எறுழம்பூ)
13. சுள்ளி (முள் கனகாம்பரம்)
14. கூவிரம்
15. வடவனம் (துளசி)
16. வாகை
17. குடசம்
18. எருவை (கோரை)
19. செருவிளை(வெள்ளைக்காக்கணாம் பூ)
20. கருவிளம்
21. பயினி
22. வானிஓமம்
23. குரவம்
24. பசும்பிடி
25. வகுளம்(மகிழம்)
26. காயா
27. ஆவிரை (ஆவாரம்பூ)
28. வேரல் (மூங்கில்)
29. சூரல் பிரம்பு
30. சிறுபூளை
31. குறுநறுங்கண்ணி
32. குருகிலை
33. மருதம்
34. கோங்கம் (நெல்லி)
35. போங்கம்
36. திலகம்
37. பாதிரி
38. செருந்தி
39. அதிரல் (காட்டு மல்லி)
40. சண்பகம்
41. கரந்தை
42. குளவி
43. மாமரம் (மாம்பூ)
44. தில்லை
45. பாலை
46. முல்லை
47. கஞ்சங்குல்லை
48. பிடவம்
49. செங்கருங்காலி
50. வாழை
51. வள்ளி (பூசணி)
52. நெய்தல்
53. தாழை
54. தளவம்
55. தாமரை
56. ஞாழல்
57. மௌவல்
58. கொகுடி(கொடி முல்லை)
59. சேடல்
60. செம்மல் முல்லை
61. சிறுசெங்குரலி
62. கோடல் வெண்காந்தள்
63. கைதை (தாழையின் ஒருவகை)
64. வழை
65. காஞ்சி
66. கருங்குவளை (மணிக் குலை)
67. பாங்கர்
68. மரவம், மராஅம் (கடம்பு)
69. தணக்கம் (நுணா)
70. ஈங்கை
71. இலவம்
72. கொன்றை
73. அடும்பு
74. ஆத்தி (திருவாத்தி)
75. அவரை
76. பகன்றை (கிலுகிலுப்பை)
77. பலாசம் (முள்முருக்கு)
78. பிண்டி (அசோகம்)
79. வஞ்சி
80. பித்திகம் (பிச்சி, சாதிமுல்லை)
81. சிந்துவாரம் (நொச்சி)
82. தும்பை
83. துழாய் (நீலத்துளசி, கிருஷ்ணதுளசி)
84. தோன்றி
85. நந்தி
86. நறவம்
87. புன்னாகம் (புங்கம்)
88. பாரம் (பருத்தி)
89. பீரம் (பீர்க்கு)
90. குருக்கத்தி
91. ஆரம் (சந்தனம்)
92. காழ்வை (அகில்)
93. புன்னை
94. நரந்தம் (நார்த்தம்)
95. நாகம் (நாவல்)
96. நள்ளிருணாறி
97. குருந்தம் (காட்டு நாரத்தம்)
98. வேங்கை
99. புழகு (மலையெருக்கு)