வகுப்பு: 7.ஆம் வகுப்பு
பாடம்: தமிழ்
தலைப்பு: செய்யுள் (புதுமை விளக்கு)
நாள் : பிப்ரவரி நான்காம் வாரம்
(21-02-2022 முதல் 26-02-2022 வரை)
1.அறிமுகம்:
ஆழ்வார்கள் யார் தெரியுமா? என்ற வினாவைக் கேட்டு மாணவர்கள் கூறும் விடைகள் மூலம் பாடத்தை அறிமுகம் செய்தல்
2.படித்தல்:
செய்யுட் பகுதியை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும் சொற்களைப் பிரித்துப் படித்துக் காட்டுதல்
ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே செய்யுட் பகுதியைப் படித்தல்.
தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.
எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.
3.மனவரைபடம்:
4.தொகுத்தலும்,வழங்குதலும்:
திருமாலைப் போற்றிப் பாடியவர்கள் பன்னிரு ஆழ்வார்கள். அவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பே நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்.இதனைத் தொகுத்தவர் நாதமுனி என்பவராவார்.
பன்னிரு ஆழ்வார்களுள் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரையும் முதலாழ்வார்கள் என்பர்.
நமது பாடப்பகுதியில் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் ஆகியோர் இயற்றிய பாடல்களுள் ஒவ்வொன்று தரப்பட்டுள்ளன.
நமது பாடப் பகுதியில் தரப்பட்ட பாடல்கள் அந்தாதி எனும் சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தவை.
5.வலுவூட்டுதல்:
பொய்கையாழ்வார் பூதத்தாழ்வார் இருவருக்கும் அவ்வப்பெயர்கள் எவ்வாறு வந்தன? என்ற விளக்கத்தைக் கூறி மாணவர்களின் கற்றலுக்கு வலுவூட்டுதல்
6.மதிப்பீடு:
மாணவர்களிடம் பின்வரும் வினாக்களைக் கேட்டு அவர்களது கற்றல் அடைவுகளை மதிப்பீடு செய்தல்.
ஆழ்வார்கள் மொத்தம் எத்தனை பேர்?
ஆழ்வார்கள் பாடிய பாடல்கள் எத்தனை தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன?
நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தைத் தொகுத்தவர் யார்?
அந்தாதி என்பது எந்த இலக்கிய வகையைச் சார்ந்தது?
ஞானம் என்ற சொல்லின் பொருள் என்ன?
7. குறைதீர் கற்றல்:
கற்றலில் குறைபாடு உடைய மாணவர்களைக் கண்டறிதல்.
படித்தல், எழுதுதல் உள்ளிட்ட அடிப்படைத் திறன்களில் குறைபாடு உடைய மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு எளிமையான செயல் திட்டங்களை உருவாக்கி படங்களைக் கற்பித்தல்.
எழுத்துகளை இனங்கண்டு எழுத்துகளைக் கூட்டி படிக்கும் திறன் குறைந்த மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு அடிப்படை எழுத்து பயிற்சி வழங்குதல்.
பாடக் கருத்துகளை மீண்டும் சுருங்கக் கூறி மீள்பார்வை செய்து,
கற்றலில் ஏற்படும் குறைபாட்டைக் களைதல்
8.எழுதுதல்:
பாடப்பகுதியின் முடிவில் தரப்பட்டுள்ள மதிப்பீடு வினாக்களுக்கான விடைகளை எழுதி வரச் சொல்லுதல்.
9.தொடர்பணி:
ஆழ்வார்கள் எழுதிய பாடல்களில் மிகப் புகழ் பெற்ற சில பாடல்களைத் தேடி எழுதி வரச் சொல்லுதல்
கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள்:
படவீழ்த்தி
கணிப்பொறி
பாடப்புத்தகம்
கரும்பலகை
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்கு