7 TH STD TAMIL MODEL LESSON PLAN (FEBRUARY 4 TH WEEK)

 வகுப்பு: 7.ஆம் வகுப்பு

பாடம்: தமிழ்

தலைப்பு: செய்யுள் (புதுமை விளக்கு) 

நாள் : பிப்ரவரி நான்காம் வாரம்

             (21-02-2022 முதல் 26-02-2022 வரை)


1.அறிமுகம்:

  • ஆழ்வார்கள் யார் தெரியுமா? என்ற வினாவைக் கேட்டு மாணவர்கள் கூறும் விடைகள் மூலம் பாடத்தை அறிமுகம் செய்தல்

2.படித்தல்:       

     செய்யுட் பகுதியை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும்  சொற்களைப் பிரித்துப் படித்துக் காட்டுதல்

  • ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே  செய்யுட் பகுதியைப்  படித்தல்.

  • தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.

  • எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.

3.மனவரைபடம்:



4.தொகுத்தலும்,வழங்குதலும்:

  • திருமாலைப் போற்றிப் பாடியவர்கள் பன்னிரு ஆழ்வார்கள். அவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பே நாலாயிரத்  திவ்வியப் பிரபந்தம்.இதனைத் தொகுத்தவர் நாதமுனி என்பவராவார். 

  • பன்னிரு ஆழ்வார்களுள் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரையும் முதலாழ்வார்கள் என்பர்.

  • நமது பாடப்பகுதியில் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் ஆகியோர் இயற்றிய பாடல்களுள் ஒவ்வொன்று தரப்பட்டுள்ளன.

  •  நமது பாடப் பகுதியில் தரப்பட்ட பாடல்கள் அந்தாதி எனும் சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தவை. 

5.வலுவூட்டுதல்:

  • பொய்கையாழ்வார் பூதத்தாழ்வார் இருவருக்கும் அவ்வப்பெயர்கள் எவ்வாறு வந்தன?  என்ற விளக்கத்தைக் கூறி மாணவர்களின் கற்றலுக்கு வலுவூட்டுதல்

6.மதிப்பீடு:

      மாணவர்களிடம் பின்வரும் வினாக்களைக் கேட்டு அவர்களது கற்றல் அடைவுகளை மதிப்பீடு செய்தல்.

  •  ஆழ்வார்கள் மொத்தம் எத்தனை பேர்?

  •  ஆழ்வார்கள் பாடிய பாடல்கள் எத்தனை தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன?

  •    நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தைத் தொகுத்தவர் யார்?

  •  அந்தாதி என்பது எந்த இலக்கிய வகையைச் சார்ந்தது?

  •  ஞானம் என்ற சொல்லின் பொருள் என்ன?

7. குறைதீர் கற்றல்:

  • கற்றலில் குறைபாடு உடைய மாணவர்களைக் கண்டறிதல்.

  • படித்தல், எழுதுதல் உள்ளிட்ட அடிப்படைத் திறன்களில் குறைபாடு உடைய மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு எளிமையான செயல் திட்டங்களை உருவாக்கி படங்களைக் கற்பித்தல்.

  • எழுத்துகளை இனங்கண்டு எழுத்துகளைக் கூட்டி படிக்கும் திறன் குறைந்த மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு அடிப்படை எழுத்து பயிற்சி வழங்குதல்.

  • பாடக் கருத்துகளை மீண்டும் சுருங்கக் கூறி மீள்பார்வை செய்து,

கற்றலில் ஏற்படும் குறைபாட்டைக் களைதல் 

8.எழுதுதல்:   

  • பாடப்பகுதியின் முடிவில் தரப்பட்டுள்ள மதிப்பீடு வினாக்களுக்கான விடைகளை எழுதி வரச் சொல்லுதல்.


9.தொடர்பணி:

  • ஆழ்வார்கள் எழுதிய பாடல்களில் மிகப் புகழ் பெற்ற சில பாடல்களைத் தேடி எழுதி வரச் சொல்லுதல்

  கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள்:

  •  படவீழ்த்தி

  • கணிப்பொறி

  • பாடப்புத்தகம்

  • கரும்பலகை 

1 கருத்துகள்

நன்றி

புதியது பழையவை